தமிழகத்தில் 21 சுங்க சாவடிகளில் கடுமையான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
சென்னை: தமிழகத்தில் 21 சுங்க சாவடிகளில் இன்று முதல் கடுமையான கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 48 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சுங்க கட்டண உயர்வு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வு அமலுக்கு வந்த 21 சுங்க சாவடிகள் விவரம்:
புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்),
மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி),
விஜய மங்கலம்(குமாரபாளையம்), விக்கிரவாண்டி டோல்கேட் திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்),
வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்),
திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி).












Click it and Unblock the Notifications