மீண்டும் எகிறிய தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு.. இப்போ என்ன விலை?
சென்னை: தக்காளி விலை நேற்று சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.
தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. வழக்கமாக ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்றாலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து அதிர வைத்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து 150 ரூபாயை எல்லாம் தாண்டியது.

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில நகரங்களில் தக்காளி விலை ரூ.150 ஐ தாண்டி விற்பனையானது. இந்திய கிச்சன்களில் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் அனைவரும் தற்போது கால் கிலோ, அரைகிலோ என வாங்க தொடங்கி விட்டனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணபப்டும் சூழலே உள்ளது. இதனிடையே நேற்று தக்களி விலை சற்று குறைந்தது. தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் போல காஸ்ட்லியாக இருந்த தக்காளி விலை சரிந்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் வியாபாரிகளும் வழக்கத்தை விட அதிக அளவில் கோயம்பேடு சந்தையில் கொள்முதல் செய்வதை பார்க்க முடிந்தந்து. இந்த நிலையில், இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளி கிலோவிற்கு ரூ.30 உயர்ந்துள்ளது. முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 90 ல் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90 ஆக விற்பனையாகிறது. பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ 110 ஆக உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து 100 ரூபாயாக விற்பனையாகிறது. தக்காளி விலை மட்டும் இன்றி மேலும் சில காய்கறிகளின் விலையும் மீண்டும் உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications