Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் எகிறிய தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு.. இப்போ என்ன விலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை நேற்று சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.

தக்காளி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. வழக்கமாக ஜுலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்றாலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து அதிர வைத்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து 150 ரூபாயை எல்லாம் தாண்டியது.

Tomato price hike again: Customers shocked as Rs 30 per kg increase in chennai Koyambedu

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில நகரங்களில் தக்காளி விலை ரூ.150 ஐ தாண்டி விற்பனையானது. இந்திய கிச்சன்களில் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் அனைவரும் தற்போது கால் கிலோ, அரைகிலோ என வாங்க தொடங்கி விட்டனர்.

இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணபப்டும் சூழலே உள்ளது. இதனிடையே நேற்று தக்களி விலை சற்று குறைந்தது. தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் போல காஸ்ட்லியாக இருந்த தக்காளி விலை சரிந்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் வியாபாரிகளும் வழக்கத்தை விட அதிக அளவில் கோயம்பேடு சந்தையில் கொள்முதல் செய்வதை பார்க்க முடிந்தந்து. இந்த நிலையில், இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளி கிலோவிற்கு ரூ.30 உயர்ந்துள்ளது. முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூபாய் 90 ல் இருந்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90 ஆக விற்பனையாகிறது. பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ 110 ஆக உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து 100 ரூபாயாக விற்பனையாகிறது. தக்காளி விலை மட்டும் இன்றி மேலும் சில காய்கறிகளின் விலையும் மீண்டும் உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+