முரளிதரன் சினிமா-விஜய்சேதுபதி முடிவெடுக்காவிட்டால் எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும்: வேல்முருகன்
சென்னை: முத்தையா முரளிதரன் சினிமா தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி உரிய முடிவெடுக்காவிட்டால் உரிய எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சினிமாவில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சிங்களருக்கு ஆதரவாக இருக்கும் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது பொதுவான எதிர்ப்பு.

இது தொடர்பாக விஜய்சேதுபதிக்கு கவிஞர் தாமரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்.. அவரது படத்தில் நடிப்பதை விட பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதுதான் உங்களுக்குப் பொருத்தம் என்று கூறியிருந்தார். கவிஞர் தாமரையின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கவிஞர் தாமரையின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். மேலும், கவிஞர் தாமரை அவர்களின் மேற்கண்ட கருத்தை முழுமனதோடு ஏற்கிறேன். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் உலகத் தமிழினத்தின் வேண்டுகோளை ஏற்று விரைவில் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறேன்.
இல்லையெனில் இனிவரும் காலங்களில் இதற்கான எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும் என்றும் நம்புகிறேன் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications