டெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்
சென்னை: டெல்லி போர்க்களமானதற்கு காரணமே பிரதமர் மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது வன்முறையை ஏவிவிட்டு தடியடி நடத்திய நடுவண் அரசின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் பெருமுதலாளிகளுக்காக உலகரங்கில் இந்தியா தலைகுனிய வேண்டிய சூழலை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கிவிட்டார் என்றும் குற்றஞ்சாற்றுகிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிரானவை என்று விவசாயிகள் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமல், இந்த மூன்று சட்டங்களையும் அவசரகதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களை முழுமையாக தலைமுழுக வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் டெல்லியில் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களோடு மத்திய அரசு பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதன் காரணமாக தீவிரமடைந்த போராட்டத்தின் உச்சமாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி 2 லட்சம் ட்ராக்டர்களுடன் இன்று விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பரித்து நுழைந்தனர். டெல்லியின் எல்லைகளில் அமைந்துள்ள சிங்கு, திகிரி, காசிப்பூர் ஆகிய இடங்களை அவர்கள் வந்தடைந்தபோது, ராஜபாதையில் குடியரசு பேரணி நடை பெறுவதால், உள்ளே அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் கட்டுக்கடங்காத விவசாயிகள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்தனர். இதைத்தொடர்ந்து எங்கிருந்தோ உத்தரவு வர, விவசாயிகள் மீது தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் கூட்டத்தில் ஊடுருவிய அடியாட்கள் வன்முறையில் ஈடுபட்டதால், காவல்துறையினர் மிருகத் தாக்குதலை நடத்தினர்.
இதில் உத்தரகாண்ட் விவசாயி நவநீத்சிங் உயிரிழந்தார். அவரது உடலை சாலையில் கிடத்தியும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் செங்கோட்டையிலும் புகுந்த விவசாயிகள், அங்கு தங்கள் கொடிகளையும் நாட்டினர். அங்கேயும் தடியடி நடத்தப்பட்டது. மொத்தத்தில் தலைநகர் டெல்லி இன்று போர்க்களம் போல் மாறியது. இதற்கு மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும் தான் காரணம். இந்த நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் மோடி அரசானது இனியாவது நாட்டின் நலன் கருதி உடனடியாக மூன்று விவசாய விரோத சட்டங்களையும் தலைமுழுகிட வேண்டும்.. இல்லையேல் இந்தியாவுக்கு உலக அரங்கில் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிந்துவிட முடியாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications