உங்க வீட்டை.. போயஸ் கார்டன் போல பவர் சென்ட்டராக மாற்றுகிறோம்! பனையூரிலேயே விஜய் தங்க இப்படி ஒரு காரணமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்யின் சென்னை பனையூர் இல்லம், அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசியலில் ஒரு காலத்தில் கோபாலபுரம் மற்றும் போயஸ் கார்டன் போன்றவை அதிகார மையங்களாகத் திகழ்ந்ததைப் போல, விஜய் தனது பனையூர் வீட்டை சக்திவாய்ந்த அரசியல் சின்னமாக மாற்ற முயன்று வருகிறார்.

அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. ஒரு அரசியல் ஆலோசகரின் ஆலோசனையின்படியே விஜய் இப்படி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

vijay tvk

போயஸ் கார்டன் - கோபாலபுரம் இல்லம்

தமிழக அரசியலில், சில இல்லங்கள் வெறும் இருப்பிடங்களாக இல்லாமல், அதிகாரச் சின்னங்களாகவே விளங்கின. மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லம், அவரது அரசியல் அடையாளத்துடன் பிரிக்க முடியாதது. முக்கிய முடிவுகளும், மூத்த தலைவர்களின் சந்திப்புகளும் அங்கேயே நடந்தன. திமுகவின் அரசியல் மையமாக விளங்கியதுடன், ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாகவும் மாறியது.

அதேபோல, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பகுதியும் பெரும் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. அவரது ஆட்சி காலத்தில், அது முக்கிய அதிகார மையம் என்றே பார்க்கப்பட்டது. முக்கிய கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கு அடிக்கடி வந்து சென்றனர். பல அரசியல் வியூகங்கள் இங்கிருந்தே திட்டமிடப்பட்டதாக நம்பப்பட்டது. காலப்போக்கில், போயஸ் கார்டன் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவே மாறியது.

விஜயின் திட்டம்

தற்போது, அரசியல் ஆய்வாளர்கள், விஜய் தனது பனையூர் இல்லத்தின் மூலம் இதே பாணியைப் பின்பற்றுகிறார் என்கின்றனர். அரசியலுக்கு வந்ததில் இருந்தே விஜய் அடிக்கடி பயணம் செய்வதையோ அல்லது பல இடங்களிலிருந்து செயல்படுவதையோ குறைத்துக்கொண்டு, தனது பெரும்பாலான நேரத்தை பனையூர் இல்லத்திலேயே செலவிடுகிறார். கட்சி கூட்டங்கள், வியூக ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகள் அனைத்தும் அங்கேயே நிகழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்க வீட்டை பவர் சென்டராக மாற்றுகிறோம் என்று கூறிய ஒரு அரசியல் ஆலோசகரின் ஆலோசனையின்படியே விஜய் இப்படி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, பல முக்கிய தலைவர்களும், அமைப்பாளர்களும் பனையூர் இல்லத்திற்கு அவ்வப்போது வந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் தேர்வு முதல் அமைப்பு ரீதியான திட்டமிடல் வரை, பல முக்கிய விஷயங்கள் இந்த இல்லத்திலேயே கையாளப்படுகின்றன. இது, விஜய் தனது இல்லத்தை அரசியல் இயக்கத்தின் மைய நரம்பு மண்டலமாக மாற்றிவிடத் திட்டமிடுகிறார் என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.

விஜயின் போயஸ் பிளான்

இத்தகைய இல்லங்கள் தலைவர்களுக்கு வலுவான அரசியல் அடையாளத்தை உருவாக்க உதவுகின்றன என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட இடம் தலைமைத்துவத்துடன் நெருக்கமாக இணைக்கப்படும்போது, அது வலிமை மற்றும் கட்டுப்பாட்டின் செய்தியை மக்களுக்கு அனுப்புகிறது. போயஸ் இல்லம் முன் தொண்டர்கள் நின்றது போல தன் வீடு முன் மக்கள் நிற்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். காலப்போக்கில், அந்த இடமே மக்களின் மனதில் குறியீட்டு மதிப்பை பெற்று, ஓர் அரசியல் சின்னமாகவும் மாறுகிறது.

தேர்தல்கள் நெருங்கி வருவதாலும், விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதாலும், பனையூர் இல்லம் இப்போது தனிப்பட்ட குடியிருப்பை விட .. ஒரு அரசியல் சின்னமாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் கோபாலபுரமும், போயஸ் கார்டனும் முன்பு அரசியல் அடையாளங்களாக விளங்கினவோ, அதேபோல பனையூர் இல்லமும் ஒரு அரசியல் அடையாளச் சின்னமாக உருவெடுக்க விஜய் திட்டமிட்டு செயல்படுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+