தவெக இஃப்தார் விருந்து நிகழ்ச்சி.. இன்று நாள் முழுவதும் நோன்பு வைக்கும் விஜய்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துவிட்டது. இந்நிலையில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் இன்று முழுவதும் நோன்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.. பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளை செய்தனர்.

தவெக இஃப்தார் விருந்து
ஆனால் தவெக தரப்பில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் என்று ஆதவ் கூறியுள்ளார். தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்.
புதுச்சேரி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று முன் தினமும், தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் நேற்றும் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தவெக சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் இன்று இஃப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விஜய் நோன்பு
இன்று மாலை 6 மணியளவில் மாமல்லபுரம் தனியார் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 1,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதற்காக விஜய் இன்று முழுவதும் நோன்பு வைத்து, மாலை இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்பை திறக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications