Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்பட்டு அருகே கண் இமைக்கும் நேரத்தில் எமனாக வந்த கார்.. எஸ்ஐ உள்பட இரண்டு காவலர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று காலை (திங்கள்கிழமை) நடந்த சாலை விபத்தில் காவல் துறை உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு பெண் காவலர்கள் உயிரிழந்தனர். மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38) மற்றும் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33). மேற்கண்ட இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று (நவம்பர் 4ம் தேதி) காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தான் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

chengalpattu accident

சென்னையை, அடுத்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக 38 வயதாகும் ஜெயஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இதேபோல் 33 வயதாகும் நித்யா என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். காவலர்கள் இருவரும் வழக்கு ஒன்றில் தேடப்படும் நபரை பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பயணித்தனர். இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர் நித்யா படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேல்மருவத்தூர் போலீஸார், காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். மேலும், உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ) உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக கார்களில் செல்வோர், அதிவேகமாக செல்லும் போது, அதாவது 110, 120 கிமீ வேகத்தில் செல்லும் போது, முன்னால் செல்லும் வாகனங்கள் அதே வேகத்தில் சென்றால் பிரச்சனை ஏற்படுவது இல்லை... மாறாக கண் இமைக்கும் நேரத்தில் முன்னால் செல்லும் வாகனங்கள் பிரேக் பிடிக்கும் போது, அல்லது வேகம் குறைவாக செல்வோரை கடைசி நொடியில் கவனித்துபிரேக் பிடிக்க முயலும், வாகனம் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதன்பின்னர் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதுகிறது.இப்படித்தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பல விபத்துக்கள் நடந்துள்ளது. அப்படி நடந்த விபத்தில் தான் இன்று காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+