Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருகிறது கடுமையான கட்டுப்பாடுகள்.. யுபிஐ பயன்படுத்துறீங்களா? அடியோடு மாறும் விதிகள்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 1 முதல், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உடனடி கட்டண சேவையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது. UPI பயனர்கள் PhonePe, Google Pay அல்லது Paytm போன்ற கட்டண சேவை வழங்குநர்களை நம்பியிருந்தால், பரிவர்த்தனைகள் நடைபெறும் விதத்தை இந்த விதிகள் பாதிக்கக்கூடும்.

UPI பரிவர்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிகளை செயல்படுத்த உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI அறிவித்துள்ளது.

UPI

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அன்றாட பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றாலும், UPI தொடர்பான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. வங்கி இருப்பை சரிபார்ப்பது, தானியங்கி கட்டணங்கள், வங்கி கணக்கு தகவல்களை பெறுவது மற்றும் கட்டண நிலையை சரிபார்ப்பது போன்ற சேவைகளுக்கு வரம்புகள் விதிக்கப்படும்.

UPI-யின் ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தவே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் என்னென்ன மாற்றங்கள்: ஆகஸ்ட் 1 முதல் UPI பயனர்கள் அனுபவிக்கவுள்ள சில முக்கிய மாற்றங்கள் இங்கே:

UPI-யில் வங்கி இருப்பை சரிபார்க்கும் வரம்பு

ஆகஸ்ட் 1 முதல், UPI பயனர்கள் ஒவ்வொரு UPI செயலியிலும் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி இருப்பை சரிபார்க்க முடியும். அதிகபட்ச நேரங்களில் Application Programming Interfaces (API) அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க இந்த கட்டுப்பாடு உதவும். NPCI இருப்பு கோரிக்கைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு வெற்றிகரமான UPI பரிவர்த்தனைக்குப் பிறகும் பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்பைக் காண முடியும். இப்போது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பேலன்சை சோதனை செய்யலாம். இனி அப்படி செய்ய முடியாது. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே செய்ய முடியும்.

நிலையான நேரத்தில் தானியங்கி கட்டணங்கள்

தினசரி UPI பரிவர்த்தனைகளில் சுமையைக் குறைக்க, திட்டமிடப்பட்ட பில் கட்டணங்களை நிலையான நேரத்தில் செயல்படுத்தும் புதிய விதிகளும் இதில் அடங்கும். வணிகர்களுக்கான தானியங்கி கட்டணங்கள் அல்லது OTT, EMI அல்லது பரஸ்பர நிதி முதலீடுகளுக்கான மாதாந்திர திட்டமிடப்பட்ட பரிமாற்றங்கள் காலை 10 மணிக்குள் அல்லது இரவு 9:30 மணிக்கு பிறகும் நடைபெறும். அதாவது இப்போதே ஆட்டோமேட்டிக் பேமெண்ட் வேறு வேறு நேரங்களில் நடக்கிறது. இனி அதை முறையான நேரங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வருகிறது.

வங்கி கணக்கு விவரங்களை அணுகுவதற்கு வருகிறது புதிய வழிகள்

அடுத்த மாதம் முதல், UPI பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பெற முடியும். அதாவது இப்போது ஸ்டேட்மென்ட் பெறுவதற்கு கட்டுப்பாடு இல்லை. இனி அதிலும் கட்டுப்பாடு வருகிறது.

கட்டண நிலை தொடர்பானவை

நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் நிலையை பயனர்கள் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இப்போது இதற்கு கட்டுப்பாடு இல்லை. அதாவது உங்கள் பேமெண்ட் சென்றதா இல்லையா என்பதை 3 முறை மட்டுமே இனி சோதனை செய்ய முடியும். மேலும், ஒவ்வொரு முயற்சிக்கும் இடையே 90 வினாடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+