சூப்பர் நிர்வாகம்...முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
சென்னை: மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டி பேசியதாக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.
மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இது தவிர தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,15 மாநிலங்களின் வேளாண்துறை அமைச்சர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:- மத்திய அமைச்சர் உடனான கூட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்வது, விவசாயிகளின் விவரங்களை கணினிமயப்படுத்துவது, கிசான் திட்டத்தில் பயன்பெற வழிவகைகளை எளிமை படுத்துவது, வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவது, எண்ணெய் பனை உற்பத்தியை அதிகப்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஸ்டாலினின் சாதனை
தமிழகத்தில் வேளாண்மை துறை நன்றாக செயல்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டினார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையை பாராட்டினார்..தமிழக அரசு சார்பில் உரத்தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம்.

வேளாண் சட்டம்
குறுவை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. அரசு சார்பில் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேவையை பூர்த்திசெய்ய மத்திய அரசை கனிமொழி எம்.பி மூலம் வலியுறுத்தினோம். அதேபோல இந்த கூட்டத்திலும் வலியுறுத்தினோம். மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படவில்லை. ஆனாலும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொடர் பாராட்டு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்கட்சியான அதிமுகவும், பாஜகவும் ஸ்டாலினை சில திட்டங்களுக்கு பாராட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications