பாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு
சென்னை: காஞ்சிபுரத்தில் வட கலை மற்றும் தென் கலை பிரிவினர் நடுவே இன்று மோதல் வெடித்து கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலையும், மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் நடைபெறும், கருட சேவை உற்சவம், உலகப்பிரசித்தி பெற்றதாகும். கருடசேவை உற்சவம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.
இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

திருமங்கையாழ்வார் பாசுரம்
இந்நிலையில், பெருமாள், காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடுபறி வைபோகத்திற்காக எழுந்தருளினார். அப்போது, அங்கு தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயற்சி செய்தனர். ஆனால், வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைகலப்பு
இதனால் அங்கு கூச்சல், குழப்பமும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு பிரிவினர் நடுவே கை கலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் உள்ள ஒருவருக்கொருவர் குறுக்கே புகுந்து சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்பிற்காக வந்த போலீசார் உள்ளே வந்து, இரு தரப்பையும் விலக்கி விட வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் முறை இல்லை
ஒருவழியாக, இரு பிரிவினரும் பிரிந்து சென்ற நிலையில் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் இருதரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுபோல மோதல் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த வருடமும் இப்படியான பிரச்சினை நடந்தது. சாதுவாக காணப்படும் பக்தர்களா கோயில் என்றும் பார்க்காமல் இப்படி அடிதடியில் ஈடுபட்டனர் என்று, கேட்கும் அளவுக்கு, ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

என்ன வித்தியாசம்?
வட கலை மற்றும் தென் கலை நடுவே 18 வித்தியாசங்களாவது உண்டு என்பர். வட கலை வைணவர்கள், திருமாலையும், லட்சுமி தேவியையும் சரிசமமாக பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள், அதிக வடமொழி கலாச்சாரங்கள் உண்டு. தென் கலை வைணவர்களும், லட்சுமி தேவியை வணங்குவார்கள் என்றாலும், திருமாலை மட்டுமே மூல தெய்வமாக கருத வேண்டும் என்ற கொள்கை கொண்டோர். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு போன்றது. இதுதான் அடிப்படை வித்தியாசமாகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications