இந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.. வைகோ
சென்னை: இந்தி மொழியால்தான் நாடாளுமன்றத்தில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது என மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.
தி இந்து நாளிதழுக்கு வைகோ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பல்வேறு துறைகளில் திறமை கொண்டவர்களை முன்னர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆனால் தற்போது இந்தி மொழியால் நாடாளுமன்ற விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது.

இந்தியில் முழக்கங்களை எழுப்புகின்றனர். பிரதமர் கூட இந்தி மொழியில்தான் பேசுகிறார். வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் போன்றோர்கள் ஆங்கிலத்தான் பேசினார்கள்.. அதற்காக அவர்கள் இந்தி மொழி தெரியாதவர்கள் என்றா சொல்கிறோம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் என அனைவருமே நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தான் உரையாற்றினார்கள்.
ஆனால் இந்தி-இந்து-இந்துராஷ்டிரா என்பதை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசுகிறார். மிகப் பெரிய ஜனநாயகவாதியான நேரு நாடாளுமன்ற கூட்டங்களை ஒருபோதும் தவிர்த்தது இல்லை.
ஆனால் பிரதமர் மோடியோ எப்போதாவது நாடாளுமன்ற கூட்டங்களுக்கு வருகிறார். அனைத்திலுமே இந்தியை திணித்து வருகின்றனர். அதனால்தான் அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications