வைகுண்ட ஏகாதசி 2025: விரதமிருக்கும் முறை என்ன? இரவு கண் விழிப்பது எப்போது? முழு விபரம் இதோ!
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு கண்விழிக்க வேண்டுமா? இல்லை நாளை கண் விழிக்க வேண்டுமா? மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதமிருக்கும் முறை என்ன? இரவு கண் விழிப்பது எப்போது? என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது பெருமாளுக்கு உரியது. மாதந்தோறும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து கிடைக்கும் பலன் கிடைக்கும்.

பெருமாளின் அருளை பெற இந்த விரதம் முக்கியமானது. இதை எப்படி தொடங்கலாம் என்பதை பார்க்கலாம். வைகுண்ட ஏகாதசி 10 ஆம் தேதி வருகிறது. அதற்கு முந்தைய நாள் தசமி திதியாகும். எனவே இன்று முதல் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
உணவை கைவிட்டுவிட்டு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நாளை அதிகாலை 4 மணிக்கு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழும்.
இதை தரிசனம் செய்த பின்னர் அன்று பகல் முழுவதும் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். நாளை இரவு கண் விழித்து ஜனவரி 11 ஆம் தேதி பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரணை என்றால் 21 காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து சாப்பிடுவது.

அடுத்த நாள் ஜனவரி 11 ஆம் தேதி காலை 8.13 மணியுடன் துவாதசி திதி முடிவடைகிறது. பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும். இன்றைய தினம் இரவு தூங்கலா். நாளைதான் கண் விழிக்க வேண்டும்.
ஜனவரி 11 ஆம் தேதி பகலில் தூங்காமல் அன்று இரவு தூங்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதமன்று விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். அல்லது நமோ நாராயண என்றாவது சொல்ல வேண்டும். நாளை காலை திருப்பள்ளிஎழுச்சி பாடி பெருமாளை துயில் எழுப்புவார்கள். அதன் பிறகு உற்சவர் சொர்க்க வாசல் வழியாக காட்சி தந்து கோயிலை வலம் வருவார். திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications