தேனும் தினைமாவும்.. என் பேராசை நிறைவேறுமா?.. வைரமுத்து ட்வீட்
சென்னை: பீட்சா பர்கர் சாப்பிடுவோருக்கு தேனும் தினைமாவும் தின்னத் தர வேண்டும் என்கிற என் பேராசை நிறைவேறுமா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டில், நாட்படு தேறல்
விசையுறு பந்தினைப்போல்
என்னை வினைப்படச் செய்கிறது
நாளை இளைஞர்க்கு
நல்ல தமிழ் கடத்த வேண்டும்
பீஸா பர்கர் தலைமுறைக்குத்
தேனும் தினைமாவும்
தின்னத்தர வேண்டும்
என் பேராசை நிறைவேறுமா?
நேற்றும் படப்பிடிப்பு
உடன்
இயக்குநர் விக்னேஷ்வரன்
ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்
என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உங்கள் சிற்றாசை கண்டிப்பாக நிறைவேறும் என பலர் ட்வீட் போட்டுள்ளனர். அதில் ஒருவர் இது பேராசையல்ல கவி மகானே
நீங்கள்
தமிழ்த் தவம் செய்கிறீர்கள்
பொருள் ஈட்ட அல்ல
சமூகம் பற்றி கவலைப்பட்டு போராடிய அய்யா அண்ணா கலைஞர் போல
உங்கள் தமிழால்
சமூகம் மேன்மையுற உழைக்கிறீர்கள்
நேற்றும்
இன்றும்
நாளையும்
செய்கிறீர்கள்
செய்வீர்கள்
வாழ்க எம்மானே
நலமுடன் தமிழுடன்
என்கிறார் இந்த வலைஞர். அது போல் இன்னொருவர்
ஆயிரம் தான் பீசா பர்கர் சாப்பிட்டாலும், தேனும் தினை மாவும் என்றும் ஒரு அலாதிச் சுவை என்பதை அறிவோம். இரண்டாம் பருவத்து தேறலின் சொற்ச் சுவை, இசைச் சுவை இவையனைத்தையும் ஒன்றிணைத்து உண்ண காத்திருக்கிறோம் ஐயா என்கிறார் இந்த வலைஞர்.

அது போல் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,
ஏசுநாதர் தோன்றியநாள்
பேரன்பின் பிறந்தநாள்;
தியாகத்தின் திருநாள்
அன்பு செலுத்துங்கள்;
செலுத்தப்படுவீர்கள்
முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கட்டும்
உலகக்
கிறித்துவ சமூகத்துக்குக்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications