வாழ்க்கை முழுக்க தமிழுக்கு தொண்டாற்றியவர் .. கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும்.. திருமாவளவன்
சென்னை: , வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் மேன்மைக்காகத் தொண்டாற்றிய கருணாநிதியின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காலை முதலே பலரும் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திருமாவளவன் அறிக்கை
இந்நிலையில், வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் மேன்மைக்காகத் தொண்டாற்றிய கருணாநிதியின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தைப் போல இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் பல்கலைக்கழகம்
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தனது அறிக்கையில், "தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழகத்தில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

கருணாநிதி பெயரில்
தமிழ்நாட்டில் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் பல துறைகளுக்கெனத் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழகத்தில் பொருத்தமானதொரு இடத்தில், கருணாநிதி பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
Recommended Video

மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை (Moscow State Linguistic University) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம். கருணாநிதியின் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையைத் தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications