பரிசோதனைகள் முழுமை அடையாத கோவேக்சின் தடுப்பூசி-தமிழகத்தில் அனுமதிக்க கூடாது-விசிக எம்பி ரவிக்குமார்
சென்னை: பரிசோதனைகள் முழுமை அடையாத கோவேக்சின் (கோவாக்சின்) கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லோக்சபா எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின் அல்லது கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி இதுவரை 3 கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் 2 கட்ட பரிசோதனைகள் முடிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளன. 3-ம் கட்ட பரிசோதனைகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பொதுமக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனையடுத்து கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இந்த கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என லோக்சபா எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும் pic.twitter.com/ab6dNU3x7S
— Dr Ravikumar M P (@WriterRavikumar) January 4, 2021
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் ரவிக்குமார் எழுதியுள்ளதாவது:
உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவேக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்கவேண்டும்
சுதேசி தடுப்பூசி என சொல்லப்படும் கோவேக்ஸின் குறித்து மருத்துவ வல்லுநர்கள் எழுப்பும் ஐயம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications