Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை கைவிட்ட வீராணம் ஏரி.. கைவிடாத வாலாஜா ஏரி.. அதற்கு தண்ணீர் எங்கிருந்து வருது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரி தற்போது முற்றிலும் வறண்டு கைவிட்டது. அதேநேரம் சென்னை மக்களுக்கு என்எல்சி சுரங்க நீர் குடிநீராக அனுப்பி வைக்கப்படுகிறது. என்எல்சி சுரங்க நீர், வாலாஜா ஏரியில் தேக்கப்பட்டு அதன் வழியாக 15 கன அடி தண்ணீர் தினமும் அனுப்பப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மிகப்பெரிய அளவில் வீராணம் ஏரி அமைந்திருக்கிறது. காவிரி ஆறு நீர் தான் இதற்கு முக்கியமான நீர் ஆதாரமாகும். இந்த இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவுடன் பறந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் சுமார் 44 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

Veeranam lake that abandoned Chennai Walajah lake that never abandoned Do you know the sources

குறிப்பாக சென்னை மக்களுக்கு தினமும் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சமீப காலம் வரை தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை.. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து இல்லை.. அதேபோல் வடகிழக்கு பருவ மழையும் இந்த முறை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை..

தமிழ்நாட்டிற்கு விழுக வேண்டிய மொத்த மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், தூத்துக்குடி, தென்காசி மற்றும் நெல்லையிலும் விழுந்துவிட்டது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. டெல்டா பகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படி மழையே பெய்யவில்லை.

இதன் காரணமாக காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்ததாலும் கடந்த பிப்ரவரி மாதம் பாசனத்துக்கு நீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் கடலா அல்லது ஏரியா என்று வாயை பிளக்க வைத்த வீராணம் ஏரி, பிப்ரவரியில் அடியோடு வறண்டது. இதனால் கடந்த 2 வாரங்களாக வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

சென்னையை வீராணம் ஏரி இந்த முறை கைவிட்டாலும், பக்கத்தில் உள்ள வாலாஜா ஏரி கைகொடுத்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவார்கள்.. அப்படியே என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்கி வருகிறார்கள்.

வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாக இருக்கிறது. தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருக்கிறது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி சென்னையின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+