அந்த பாலியல் கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை.. வேல்முருகன் காட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "பொள்ளாச்சி பாலியல் செய்த கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை" என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கண்டன ஆர்ப்பாட்டம்
அதில், "பொள்ளாச்சி தொடர்பான விசாரணையில் அதிமுக அரசு நேர்மையாக விசாரணையை மேற்கொள்ளும் என நம்பமுடியாது. அதனால் நீதிமன்றமே நேரடியாக முன்வந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும்" என்ற கோரிக்கை வைத்து அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

வீடியோ
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தவுடன் தன் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று பேசி வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியுள்ளதாவது:

கடும் தண்டனை
"பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஒரு கும்பல். அவர்கள் உயிரோடு இருக்கவே தார்மீக உரிமை கிடையாது. இந்த கொடூர சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்" என்றார்.

டிடிவி தினகரன்
கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "டிடிவி தினகரன், நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார். ஆனால் நான் போகவில்லை. அவர் மட்டுமில்லை.. என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சியினர் என்னை அழைத்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications