அந்த பாலியல் கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை.. வேல்முருகன் காட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: "பொள்ளாச்சி பாலியல் செய்த கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை" என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கண்டன ஆர்ப்பாட்டம்
அதில், "பொள்ளாச்சி தொடர்பான விசாரணையில் அதிமுக அரசு நேர்மையாக விசாரணையை மேற்கொள்ளும் என நம்பமுடியாது. அதனால் நீதிமன்றமே நேரடியாக முன்வந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும்" என்ற கோரிக்கை வைத்து அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

வீடியோ
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்தவுடன் தன் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று பேசி வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியுள்ளதாவது:

கடும் தண்டனை
"பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஒரு கும்பல். அவர்கள் உயிரோடு இருக்கவே தார்மீக உரிமை கிடையாது. இந்த கொடூர சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்" என்றார்.

டிடிவி தினகரன்
கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "டிடிவி தினகரன், நான் கூட்டணிக்கு வருவேன் என்று காத்திருந்தார். ஆனால் நான் போகவில்லை. அவர் மட்டுமில்லை.. என் வீட்டுக்கு வந்தும், மருத்துவமனைக்கு வந்தும் கூட்டணிக்கு வாருங்கள் என்று பல்வேறு கட்சியினர் என்னை அழைத்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications