Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமாசல பிரதேசத்தில் கார் விபத்தில் உயிரிழந்த.. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வெற்றி துரைசாமி உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

Vetri Duraisamys body found dead in Sutlej river Cremation today in Chennai

மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்தார் சைதை துரைசாமி. சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது. ரத்தக்கறை மாதிரிகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் மற்றும் அரசியல் தலைவர்கள் திருமாவளவன், சீமான், சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

வெற்றி துரைசாமி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் இரவு 9 மணியளவில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக மனித நேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரது பூத உடல் பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+