எங்கிருந்து குதிக்குறாரு பாருங்க.. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் நீச்சலடித்து மகிழும் இளைஞர்கள்
சென்னை: சென்னை வியாசர்பாடி சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் அதில் குதித்து நீச்சலடித்து விளையாடி இளைஞர்கள் மகிழும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெளியேற வழியில்லாத காரணம். ஒரே நேரத்தில 20 செமீக்கு மேல் பெய்த மழை, சென்னையை புரட்டி போட்டுள்ளது.
சென்னையில் 2015க்கு பிறகு மோசமான மழையை சந்தித்துள்ளது. இதனால் . தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.. மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் வரமுடியாது
இதேபோல் சேத்துபட்டு - பூந்தமல்லி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு அதிக அளவு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்து என்பதால் மூடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் குதித்தனர்
விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதுமாக மூழ்கியது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் சுரங்கப்பாதையை நீச்சல் குளமாக மாற்றி குதித்து விளையாடி வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வடசென்னைதான் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் வெள்ளநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது,

வானிலை மையம்
இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

மழை பெய்யும்
இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

கடலுக்கு போக வேண்டாம்
இதனால், வட கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்" இவ்வாறு வானிலை மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications