ஜனநாயகனுக்கு மலேசியா விதித்த கட்டுப்பாடு.. போட்ட பிளான் காலி.. கடைசி நேரத்தில் பேச்சை மாற்றிய விஜய்
நடிகர் விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை கோலாலம்பூர் புகிட் ஜாலில் மைதானத்தில் "தளபதி திருவிழா" என்ற பெயரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் அரசியல் பேச்சுக்கள் மற்றும் அடையாளங்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளதாக மலேசியக் காவல்துறை அறிவித்துள்ளது. இதனால் விஜய் தனது பேச்சை கடைசி நேரத்தில் மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள விஜய், பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில், மலேசிய அரசு இந்நிகழ்வை முற்றிலும் பொழுதுபோக்குக்கானது எனவும், அரசியல் நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சேராஸ் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் எய்தில் பொல்ஹசன், "இது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி. அரசியல் செய்திகளைப் பரப்புவதற்கு பயன்படுத்தக் கூடாது" என மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், "அரசியல் தொடர்பான பேச்சுக்கள், சின்னங்கள், பதாகைகள், அணிவகுப்புகள், மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்படுகிறது" என விளக்கமளித்தார்.
விஜய் பிளான் மாற்றம்
விஜய், மலேசியாவில் தனது 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு வலுவான அரசியல் உரையை நிகழ்த்துவார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தின.
மலேசியாவில் திட்டமிடப்பட்ட இந்த இசை வெளியீட்டு விழா, ரசிகர்கள் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினரைக் கொண்ட ஒரு பெரிய கூட்டமாக அமையவிருந்தது. நிகழ்வின்போது விஜய் அரசியல்தொடர்பாக நீண்ட நேரம் பேசுவார் என முந்தைய ஏற்பாடுகள் தெரிவித்தன. முஸ்லிம் சமூகம் தொடர்பான பல அரசியல் சிக்கல்கள் அவரது உரையில் இடம்பெறும் என வட்டாரங்கள் குறிப்பிட்டன. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்களை கவர்ந்தது போல.. இஸ்லாமியர்களை மலேசியாவில் கவரலாம் என்று விஜய் பேச்சு ரெடி செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், மலேசிய அதிகாரிகளின் தலையீட்டிற்குப் பிறகு இந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வாக மட்டுமே நடத்தப்படும் என்பதை மலேசிய அரசு தெளிவுபடுத்தியதாகத் தெரிகிறது. அரசியல் உரைகள் அல்லது அரசியல் சித்தாந்தம், மதம், சர்வதேச அரசியல் தொடர்பான கருத்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பேச்சை மாற்றிய விஜய்
இந்த கட்டுப்பாடுகளையடுத்து, விஜய் மற்றும் அவரது குழுவினர் உரையை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. இசை வெளியீட்டு விழாவுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில், நடிகர் விஜய் தனது உரையை கிட்டத்தட்ட முழுமையாக திருத்தி எழுதினார். அரசியல் கருத்துகளுக்குப் பதிலாக, திருத்தப்பட்ட உரை தனது கடைசி திரைப்படம் , அதை பற்றிய எமோஷனல் பேச்சு , திரைப்படம், இசை, 'ஜனநாயகன்' உருவாக்கம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியவற்றை மட்டுமே மையப்படுத்தியது.
இந்த மாற்றம் கடைசி நிமிடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், விஜய்யே உரையின் இறுதி வடிவத்தை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அதிகாரிகள் விதித்த எல்லைகளுக்குள் நிகழ்வு நடப்பதையும், அதே நேரத்தில் பார்வையாளர்களுடன் உணர்வுபூர்வமாக இணைவதையும் உறுதி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.
விஜய் திட்டம்
தற்போது, இசை வெளியீட்டு விழா அரசியல் சாராத நிகழ்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் இசை, நடிகர்-நடிகையர், படக்குழுவினர் மற்றும் ஒரு நடிகராக விஜய்யின் பயணத்தை முன்னிலைப்படுத்தும் என ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அரசியல் அறிவிப்புகள் அல்லது அறிக்கைகளை எதிர்பார்க்க வேண்டாம் என நிகழ்வில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியா ஜனநாயகன் - பொழுதுபோக்கு நிகழ்வு
நிகழ்வு ஏற்பாட்டாளர் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி டத்துக் அப்துல் மாலிக் தாஷ்டிகீர், "தளபதி திருவிழா இசை நிகழ்ச்சி விதிமுறைகளின்படி, முற்றிலும் பொழுதுபோக்கு நிகழ்வாகவே நடைபெறும்" என்றார். மலேசிய கெசட் போன்ற அந்நாட்டு ஊடகங்களும் இத்தடையை உறுதிப்படுத்தியுள்ளன.
ராயல் மலேசிய காவல்துறை இந்த நிகழ்வு அரசியலற்றதாக இருப்பதை உறுதி செய்ய உறுதியாய் உள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அதிகாரிகள், இடையூறுகள் இன்றி சுமூகமான நிகழ்வை நடத்துவதே இதன் நோக்கம் என்றனர்.
புகிட் ஜாலில் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 90,000 ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதால், காவல்துறை அதற்கான தயார் நிலையில் உள்ளது. இந்த பிரமாண்டமான விழாவுக்கு ரசிகர்கள் பெரும் திரளாக கூடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் மூன்று வகைகளாக விற்கப்பட்டன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. ₹2,000 முதல் ₹7,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது நடிகர் விஜய்யின் கலைப் பயணத்துக்கான ஒரு கொண்டாட்டமாக அமையும்.
ஜனா நாயகன் திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகிறது. அதற்கு முன்னதாகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மட்டுமே நோக்கம்; வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நிகழ்வை நடத்த ஏற்பாட்டாளர்களும் அதிகாரிகளும் உறுதிபடுத்துகின்றனர்.
-
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!












Click it and Unblock the Notifications