இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை... இந்தா சொல்லிட்டாரு விஜயபிரபாகரன்
இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுகவை வாழவைக்கும் இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன். இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்த நிலையில் தேமுதிக இன்று அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. தொகுதி பங்கீடு கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையால் தேமுதிக விலகியுள்ளது.
41 தொகுதிகள் கேட்ட தேமுதிக 23 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது.

தன்மானத்தை விட மாட்டோம்
கூட்டணியில் இருந்து விலகிய உடனேயே அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார் விஜயபிரபாகரன். தலையே போனாலும் தன்மானத்தை விடமாட்டோம் என்று சொன்ன அவர், அதிமுகவை வீழ்த்துவதற்காக தேமுதிக தொண்டர்கள் வேலை செய்வார்கள் என்று சொன்னார்.

நாங்கள் இனி சத்ரியர்கள்
இதுநாள்வரை சாணக்கியர்களாக இருந்த நாங்கள் இனி சத்ரியர்களாக மாறும் காலம் வந்து விட்டது என்று கூறினார். சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜயபிரபாகரன், அப்பாவும் அம்மாவும் அதுபற்றி அறிவிப்பார்கள் என்று சொன்னார்.

அமைச்சர் பதிலடி
விஜயபிரபாகரனின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். விலகியவர்கள் இதுபற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னதோடு எங்கிருந்தாலும் வாழ்க என்று சொன்னார். அதே நேரத்தில் பாஜகவின் வானதி சீனிவாசன், தேமுதிகவை கூட்டணியில் இருந்து விலக்கியிருக்கக் கூடாது என்று சொன்னார். தேமுதிக மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அப்பா போல உழைப்பேன்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிகவை கட்டிக்காக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருபவர் கேப்டன். என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன் என்று தெரிவித்தார்.

ஒருபோதும் கூட்டணியில்லை
இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. 10 ஆண்டுகளாக அதிமுகவை வாழவைக்கும் இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்று கூறியுள்ளார். அதிமுக, திமுக உடன் எந்த காலத்திலும் கூட்டணியில்லை என்று சொன்ன பல கட்சிகள் மீண்டும் அதிமுக, திமுக உடன் இணைந்துதான் இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. விஜயபிரபாகரனின் இந்த கொள்கை முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கிறது என்று பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications