வாட் ப்ரோ! இட்ஸ் வெரி ராங் ப்ரோ! ஆங்கில கவிஞரின் பெயரை மாற்றி கூறிய தவெக விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டத்தில் நடிகரும் கட்சியின் தலைவருமான விஜய், ஒரு ஆங்கில கவிதையை சொன்ன போது அந்த கவிதையை எழுதியவர் பெயரை தவறாக சொல்லிவிட்டார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. திருவான்மியூரில் ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடந்தது. இந்த முதல் பொதுக் குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் சுமார் 2000 நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த தீர்மானத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் இருந்தன. இதில் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசினர்.
அவர்களை தொடர்ந்து விஜய் பேசுகையில், தமிழுக்கு அமுதென்று பெயர். தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் புதிய வரலாறு படைக்க தயாராக வேண்டிய அவசியத்தை புரிந்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா குடும்பமும் நன்றாக வாழுறதுதான் தேவை. ஆனால் ஒரே ஒரு குடும்பம் மட்டும் சுரண்டி சுரண்டி நல்லா வாழுறது அரசியலா?
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல். மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சி நமக்கு எதிராக செய்யும் ஒன்றா, இரண்டா? புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், பொதுக் குழுவுக்கு தடைகள் என மாற்றி மாற்றி குடைச்சல் கொடுத்தீங்க.
ஏற்கெனவே அர்ஜுன், நிர்மல்குமார், ரமேஷ் உள்ளிட்டோர் நல்லா அடித்துவிட்டார்கள். நாமும் அடிக்கணுமானு யோசனையா இருக்கு. (திமுக, பாஜகவை விமர்சிப்பதை குறித்து கூறுகிறார்). மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பேர மட்டும் வீராப்பா சொன்ன பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் காட்டணும் என்றார்.
மேலும் இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பெயர்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு விஜய் விமர்சனம் செய்திருந்தார். விஜய்யின் பேச்சுக்கு நிர்வாகிகள் கை தட்டியபடியே இருந்தனர். இந்த நிலையில் விஜய் தனது உரையை முடிக்கும் போது ஆங்கில வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.
அப்போது திருக்குறளையும் சொல்லி முடித்தார். அது பேசுபொருளாகியுள்ளது. "Men may come and Men may go , but I go on forever" என்ற வில்லியம் பிளேக் எழுதிய கவிதையுடன் தனது உரையை முடிப்பதாக விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த கவிதையை எழுதியது பிளேக் இல்லை, ஆல்பிரட் லார்டு டென்னிசன்.
மனிதர்கள் வருவார்கள், போவார்கள், நான் எப்போதும் இருப்பேன் என்ற பொருள்படும்படியான கவிதையை தனது அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். மேலும் அவர்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாய் செயின்
என்ற குறளையும் கூறியிருந்தார். ஒரு செயலை செய்யத் தேவையான காலம், இடம் ஆகிய இரண்டையும் கருதிச் செயல்பட்டால் எத்தகைய பெரிய காரியத்தை செய்தாலும் அது கை கூடும் என்பதே இதன் அர்த்தமாகும்.
-
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
பனையூரில் நடக்கும் கோஷ்டி பூசல்.. ஒரு கூட்டத்தை கூட நடத்த தெரியாதா? புஸ்ஸி ஆனந்த்தை விளாசிய விஜய்! -
பாஜகவுடன் கூட்டணியா? அதிகமா பேசிட்டாங்க.. இப்தார் விருந்தில் பங்கேற்கும் விஜய்.. எந்த இடம் தெரியுமா! -
வார் ரூமுக்கு வந்த விஜய்.. தவெக சீனியர்களுடன் முக்கிய ஆலோசனை! வெளியே வந்ததும் செம உற்சாகம்! -
TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்! -
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்! -
நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்! -
நீதான்யா தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்.. இந்த நேரத்தில் இப்படியா! ஆதவ் அர்ஜுனாவால் நொந்துபோன விஜய் -
“நான் நாயுடு பையன்” பார்த்திபன் சர்ச்சை பேச்சு! தமிழ்நாட்டில் அப்படி பேசினீங்களே? இரட்டை வேடமா? கடும் விமர்சனம் -
நீங்க வந்தா மட்டும் போதும்.. விசிலை அமுக்க தாமரை போடும் கணக்கு! ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா? -
அப்படிப் போடு.. 2026ல் வெயிட் ஏற போகுது விஜய்க்கு! சிஎம் சேர் யாருக்கு? தவெக கையில் முடிவு? பின்னணி? -
டெல்லி டார்கெட்டில் ஜான் ஆரோக்கியசாமி.. தவெகவை வளைக்க பாஜக புதிய திட்டம்












Click it and Unblock the Notifications