கடும் எதிர்ப்புகளுக்கிடையே விளவங்கோடு தொகுதி காங். வேட்பாளராக விஜயதாரணி அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இறுதி கட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் விளவங்கோடு, வேளச்சேரி, மயிலாடுதுறை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயதாரணிக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி
விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான் போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் ராஜகுமாரும், குளச்சல் - பிரின்சும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள்:-
- விளவங்கோடு - விஜயதாரணி
- வேளச்சேரி - ஜே.எம்.எச்.ஹஸ்ஸான்
- மயிலாடுதுறை - ராஜகுமார்
- குளச்சல் - பிரின்ஸ்












Click it and Unblock the Notifications