"சூர்யா குடும்பத்தின் உணர்வை பாராட்டுகிறோம், அசெளகரியங்களை பெரிதுபடுத்துவது சரியானது இல்லை".. மாசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சூர்யா குடும்பத்தின் உணர்வை பாராட்டுகிறோம்.. அசெளகரியங்களை பெரிதுபடுத்துவது சரியானது இல்லை" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடிகர் சூர்யாவை பாராட்டி உள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை பொறுத்தவரை, இணை நோய் உள்ளவர்கள் தான் அந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒமிக்ரானில் இருந்து உருமாற்றமான வைரஸ் xbb 1.16 தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவி வருகிறது.

We appreciate the sentiments of Suryas family : says ma subramanian

இரண்டாவதாக இந்த கொரோனா வைரஸ், கொத்துக்கொத்தாக பரவுவது இல்லை.. ஆனாலும் கூட ஜாக்கிரதையாக இருப்பது என்பது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதிய அளவு எடுத்துள்ளோம். பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றார்.

இதனிடையே சூர்யா குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட போது பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், சூர்யாவாக இருந்தாலும்,அவரது தந்தை சிவக்குமாராக இருந்தாலும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.

நேரடியாக வந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர்களின் உணர்வை பாராட்டுகிறேன். அந்த நேரத்திலே சின்ன சின்ன அசவுகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம், அதனை பெரிதுப்படுத்துவது சரியானது இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+