சென்னையில் எதுக்கு இந்தி பிரசார சபா? இழுத்து மூடக் கோரி நாம் திராவிடர்கள் போராட்டம்
சென்னை: இந்தி பேசாத தமிழ்நாட்டின் சென்னையில் செயல்படும் இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வலியுறுத்தி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நாம் திராவிடர்கள் அமைப்பு நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய மாநிலங்களில் திராவிடர்களை ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய அமைப்பு நாம் திராவிடர்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்தி என்ற ஒரே ஒரு மொழியின் வளர்ச்சிக்காக இந்தி பிரசார செயல்படுத்தப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. சென்னையில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார சபாவை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 13-ந் தேதி சென்னையில் நாம் திராவிடர்கள் அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பாக நேற்று இந்தி பிரசார சபாவை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் திராவிடர்கள் அமைப்பினர் முழக்கப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள் டான் அசோக், கோவி லெனின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சென்னையில் நாம் திராவிடர்கள் நடத்திய போராட்டத்தின் முழு வீடியோ:












Click it and Unblock the Notifications