“சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது மேலும், தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு பேசி இருக்கிறோம். பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வெகு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. அந்த திட்டங்களை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." எனத் தெரிவித்தார்.
27 ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கேஎன் நேரு, "எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என முதல்வர் கூறியுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீரை அகற்ற மோட்டார்கள், டிராக்டர்கள் தயாராக உள்ளன.
சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications