“சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் கேஎன் நேரு திட்டவட்டம்
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது மேலும், தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு பேசி இருக்கிறோம். பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வெகு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. அந்த திட்டங்களை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." எனத் தெரிவித்தார்.
27 ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கேஎன் நேரு, "எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என முதல்வர் கூறியுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் தண்ணீரை அகற்ற மோட்டார்கள், டிராக்டர்கள் தயாராக உள்ளன.
சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications