“வைகோவையே நாங்க தூக்கி எறிஞ்சோம்.. யார் வந்தாலும் போனாலும் கவலையில்லை” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
சென்னை: திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பா.ஜ.கவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, யார் வந்தாலும் போனாலும் கவலை இல்லை எனத் தெரித்துள்ளார்.
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம் எனக் கூறியுள்ளார்.

திருச்சி சிவா மகன்
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த பா.ஜ.கவில் இணைந்த சூர்யா சிவா, தி.மு.க எனும் கட்சி ஒரே குடும்பத்தின் பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.கவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா எம்.பியின் மகன் திடீரென பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.க தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.பாரதி
இந்நிலையில், எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனின் தந்தையின் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

வைகோவையே தூக்கி எறிந்தோம்
திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பா.ஜ.கவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை. வைகோவையே தூக்கி எறிந்தோம். தி.மு.க தேம்ஸ் நதி போல, யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 ஆண்டுகள் கடந்து தி.மு.க போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் போகும் எனப் பதிலளித்தார்.

தருமபுரம் ஆதீனம்
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி தொடர்பாக தொடர் சர்ச்சைகள் நிகழ்ந்துவந்த நிலையில், பட்டின பிரவேசத்திற்கு அனுமதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தது குறித்த கேள்விக்கு, எது நியாயமோ, எது நாட்டுக்கு ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதை தான் முதல்வர் செய்துள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications