அரும்பாக்கம் அமுதா வீட்டில் இருந்த கோலம்.. ஊழியரின் பேண்டில் என்னது.. ஆடிப்போன கோயம்பேடு
சென்னை: சென்னை அரும்பாக்கம் விநாயகபுரத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அமுதா. நேற்று பகலில் சீனிவாசன் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அதன்பின்னர் சென்றுவிட்டார். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டின் உள்ளே இருந்து புகையாக வந்துள்ளது. அங்கு அமுதா இருந்த கோலம் அக்கம் பக்கத்தினரை ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் விநாயகபுரத்தில் 50 வயதாகும் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அமுதாவுக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று பகலில் சீனிவாசன் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார்.

அப்போது அமுதா டீ கடையை பார்த்துக் கொண்டார். சற்று நேரத்தில் சீனிவாசன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கடைக்கு வந்தார். அமுதா வீட்டுக்கு போய்விட்டார். நேற்று மாலை 6 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து புகையாக வந்திருக்கிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்ததுமே ஆடிப்போனானர்கள். அங்கு அமுதா இருந்த கோலம் அதிர்ச்சி அடையவைத்தது.
அமுதா, உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. இது தொடர்பாக சூளைமேடு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
அமுதா படுகொலை செய்யப்பட்டு இருப்பதை சூளைமேடு போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர். அமுதாவின் கணவர் சீனிவாசன் டீ கடையோடு குளிர்பான கடையையும் நடத்தி வருகிறார். குளிர்பான கடையில் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (28) என்பவர் வேலை செய்து வந்தார். சாந்தகுமார் வீட்டிற்கு செல்வதாக சீனிவாசனிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்
இதனால் சாந்தகுமார் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தார்கள். விசாரணையில், அவர் தான் அமுதாவை கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அமுதாவை கொலை செய்துவிட்டு, அவரது உடலையும் தீ வைத்து எரித்தாராம். அவரது பேண்ட் பாக்கெட்டுக்குள் அமுதா அணிந்திருந்த தங்க மோதிரமும், கம்மலும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள். இதனால், நகைக்காக அமுதாவை கொலை செய்தாரா அல்லது வேறு காரணமான என்று போலீசார் சாந்தகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications