அரசியல் சாசன அதிகார வரம்பு.. உச்சநீதிமன்ற தீர்ப்புகள்.. அக்னி பரீட்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி?
சென்னை: இந்திய அளவில் மாநிலங்களுக்கான ஆளுநர் பதவி, ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறார். ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவானதாக இருப்பினும் ஒரு அக்னி பரீட்சையில் இறங்கியிருப்பது போலவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் அவரது வசம் இருந்த துறைகள், வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் எனவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆணை மூலமாக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என உறுதி செய்தது.

இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில், திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்கிறேன் என நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் ஆளுநர். ஆனால் இந்த அறிக்கையை அவரே நிறுத்தியும் வைத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைதான் இப்போது ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பான விவாதங்களை உருவாக்கி உள்ளது.
அரசியல் சாசனத்தின் 164(1) பிரிவானது, மாநில முதல்வர் என்பவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்; இதர அமைச்சர்களும் மாநில முதல்வரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பர் என்கிறது. இதில் "அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பத்தின் போது பதவி வகிப்பர் " என்ற ஒற்றை வரியை வைத்து கொண்டுதான் இப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்ல. அவரை ஆதரிக்கும் பாஜகவினர் மட்டுமல்ல.. அண்மையில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானும் கூட அமைச்சர்கள் விவகாரத்தில் தலையிட்டுப் பார்த்தார்.
இத்தகைய தருணங்களில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தலையிட்டு, ஆளுநரானவர் அமைச்சர்கள் விவகாரத்தில் முதல்வரின் உதவி மற்றும் ஆலோசனைப்படிதான் செயல்பட முடியும் என தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. ஷம்சேர் சிங்/ பஞ்சாப் 1974 வழக்கில் 7 நீதிபதிகளை கொன்ட அரசியல் சாசன பெஞ்ச், சில சூழ்நிலைகளைத் தவிர்த்து அமைச்சர்கள்/ அமைச்சரவை ஆலோசனை படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிறது. அதுவும் அந்த சில சூழ்நிலைகள் என்பது கூட அரசின் பெரும்பான்மை- நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பானது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
164(1)-ல் குறிப்பிட்டிருக்கும் ஆளுநரின் விருப்பத்தின் பேரில் என்பது- பெரும்பான்மை தொடர்பான விவகாரங்களில் மட்டுமே பொருந்தக் கூடியதே தவிர அனைத்து சூழ்நிலைகளுக்கும் பொருந்தக் கூடியது அல்ல என்பதையும் உச்சநீதிமன்றம் விளக்கி இருக்க்றது.
லோக்சபாவின் முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சாரி இது தொடர்பாக கூறுகையில், ஆளுநர் ஒருவர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்த சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்ததாக தெரியவில்லை. முதல்வரின் ஆலோசனை இல்லாமல் ஒரு அமைச்சரவை நியமிக்கவோ அல்லது டிஸ்மிஸ் செய்யவோ ஆளுநரால் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நபம் ரெபியா வழக்கிலும் கூட உச்சநீதிமன்றமானது ஆளுநர் சுயமாக செயல்படக் கூடியவர் என்பதை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முயற்சிகள் எடுத்தார். அப்போது இது தொடர்பான விவாதங்களில் கருத்து தெரிவித்த லோக்சபா முன்னாள் செயலர் ஆச்சாரி, தம்மை ஒரு அமைச்சர் அவமரியாதை செய்தால், மரியாதை குறைவாக நடத்தினால் அப்போது கூட முதல்வரிடம் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய சொல்லி கேட்கத்தான் முடியும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோல அப்போது செய்தியாளர்களிடம் பேசியிருந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆளுநருக்கு குறிப்பிட்ட வரம்புகள்தான் உள்ளன என உறுதி செய்திருந்தார்.
கடந்த பிப்வரி மாதம் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது; எந்த கோஷ்டிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூடிய சட்டசபையை மாற்றவும் ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வரம்பை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது என்பது சட்டவல்லுநர்களின் கருத்தாக உ9ள்ளது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications