மகளிர் உரிமை தொகை + பழைய ஓய்வூதிய திட்டம்.. 2க்கும் அப்படி என்னங்க கனெக்சன்.. இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். நேற்று கூட ஏஐடியுசி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இதே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்று பார்த்தால் தமிழக அரசிடம் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர போதிய நிதி இல்லை.
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

குழு அமைக்கப்பட்டது
எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசின் நிதி நிலையிணையும். பணியளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டம்
இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று ஏஐடியுசி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இதே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்று பார்த்தால் தமிழக அரசிடம் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர போதிய நிதி இல்லை. இதற்கு காரணமாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசு ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே தமிழக அரசுக்கு போதிய நிதி இல்லை என்றும் அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதாவது அந்த திட்டத்திற்கு அதிக நிதி செலவிடப்படுவதால்.. மீண்டும் பழைய ஓய்வூதியத்தை திரும்ப கொண்டு வர முடியாது என்று வாதம் வைக்கப்படுகின்றது. அரசு அமைத்து உள்ள குழுவும் நிதி சிக்கல் தொடர்பான ஆலோசனைகளை, ஆய்வுகளை செய்யும்.
குழு உறுப்பினர்கள் யார் யார்?
ககன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கே.ஆர்.சண்முகம். முன்னமன் இயக்கு. Madras School of Economics, பிரத்திக் தான். இ.ஆ.ப. அடங்கிய குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் கர்நாடகாவில் நிறைவேற்றம்: சமீபத்தில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அம்மாநில தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது.
தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தாக்கல் செய்ய உள்ள அடுத்த பட்ஜெட்டில் (இந்த பட்ஜெட்டில் வாய்ப்பில்லை) இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications