தீப்பற்றி வெடித்த மின்கம்பி.. கிண்டி மருத்துவமனையில் மின்தடைக்கு என்ன காரணம்? சுப்பிரமணியன் பதில்
சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் நேற்று மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது. 3 மணிநேரத்துக்கு பிறகு மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் சென்னை கிண்டி மருத்துவமனையில் திடீரென்று தீப்பற்றி மின்கம்பிகள் எரிந்தது தான் மின்தடைக்கு காரணம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தமிழக அரசின் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்கு மொத்தம் 490 நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் பிற வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தான் நேற்று மாலை 6.45 மணியளவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இரவு 10 மணி வரை இந்த மின்தடை என்பது நீடித்தது.

மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வரும் வயர் எரிந்தது தான் மின்தடைக்கு முக்கிய காரணமாகும். அதேபோல் ஜெனரேட்டர் வயர் எரிந்ததாலும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்க முடியவில்லை.இதனால் நோயாளிகள் பரிதவித்தனர். மருத்துவமனையில் இருள் சூழ்ந்து இருந்ததால் நோயாளிகளுடன் இருந்தவர்களும் தவித்தனர். அவர்கள் செல்போனின் டார்ச்லைட்டை பயன்படுத்தினர்.
இருப்பினும் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு தனி ஜெனரேட்டர் மூலம் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதன்பிறகு இரவு 10 மணியளவில் மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது. முன்னதாக கிண்டி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது பற்றி அறிந்தவுடன் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
அதேபோல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிந்தார்.அதன்பிறகு மா சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கிண்டி மருத்துவமனைக்கு மின்தடை சரிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் வயர் மூலம் மின்தடை சரிசெய்யப்பட்டுள்ளது. எந்தவித மின்தடையும் இல்லாமல் பாதுகாப்பாக மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் தரைக்கடியில் செல்கிறது. அந்த கேபிள் திடீரென்று வெடித்துள்ளது. மின்கம்பியில் தீப்பற்றியதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications