ஜஸ்ட் மிஸ்! உயிர் தப்பிய பிடிஆர்! மேலே பாய்ந்த விமானம்! தரைமட்டமான இரட்டை கோபுரம்! அன்று என்ன நடந்து
சென்னை: அமைச்சர் பிடிஆர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, பல ஆண்டுகள் காப்ரேட் உலகில் பணியாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் இரட்டை கோபுர தாக்குதல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக வரலாற்றையும் புரட்டிப் போட்ட நிகழ்வு என்றால் அதற்கு இரட்டை கோபுர நிகழ்வை நாம் சொல்லலாம். அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு மோசமான கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது.

முதலில் அங்கிருந்த நார்தன் டவரில் விமானம் பாய்ந்தது. அது பற்றி எரிந்து கொண்டிருக்க சில நிமிடங்களில் அங்கே இருந்த சவுத் டவரிலும் விமானம் பாய்ந்தது. வெறும் கொஞ்ச நேரத்திலேயே இவை அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.
தாக்குதல்: இரட்டை கோபுர தாக்குதலில் 2500க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். அதன் பின்னரே அமெரிக்கா தனது உளவு அமைப்புகளைப் பல மடங்கு வலுப்படுத்தியது. அமெரிக்கா உளவு மற்றும் பாதுகாப்புத் துறையில் எந்தளவுக்குப் பிரச்சினை இருந்தது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதன் பிறகு இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பின்லேடனை தேடி அமெரிக்கா பெரும் வேட்டை நடத்தி அவரை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றது எல்லாம் தனிக்கதை.
இதற்கிடையே இந்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்த போது அமைச்சர் பிடிஆர் அங்கே தான் இருந்துள்ளார். இது குறித்து தகவல்களை அவரே பகிர்ந்துள்ளார். நமது ஐடி துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வரும் இவர், அதற்கு முன்பு காப்ரேட் உலகைக் கலக்கியவர்.
அமைச்சர் பிடிஆர்: அமெரிக்காவில் படித்த பிடிஆர். அங்கேயே பல ஆண்டுகள் வேலை செய்தார். உலக புகழ்பெற்ற லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் கீழ் வரும் இரண்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலும் அவர் இருந்தார். இன்று இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அமைச்சர் பிடிஆர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "9/11 தாக்குதல் நடந்த அன்று அங்கே இருந்த பிரகாசமான நீல வானம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று காலை 8:25க்கு நான் எனது வழக்கமான வாட்டர் டாக்ஸியைத் தவறவிட்டேன். இதனால் உலக வர்த்தக மையத்திற்கு நான் நடந்து செல்ல நேரிட்டது.
என்ன சொன்னார்: இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கல்.. இருப்பினும், அங்கே இறைவனின் அருளால் இப்போது பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் புதிய கோபுரங்கள் எழுந்து நிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். பிடிஆர் இரட்டை கோபுர தாக்குதல் குறித்து ட்வீட் செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே சில முறை இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதன்படி இன்றைய ட்வீட்டில் அவர் தனது முந்தைய பதிவு ஒன்றையும் டேக் செய்துள்ளார்.

அதில் அமைச்சர் பிடிஆர், "தாக்குதல் நடந்த அந்த 9/11/01இல் நான் உலக வர்த்தக மையத்தில் இருந்தேன்.. இந்த நிகழ்வு எனக்குள் மறக்கவே முடியாத நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 6 மாதங்களுக்குப் பிறகு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது" என்று பதிவிட்டிருந்தார்.
அங்கே தான் இருந்தேன்: அதேபோல மற்றொரு பழைய ட்வீட்டில் அமைச்சர் பிடிஆர், "2001 செப்டம்பர் 11ஆம் தேதி அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது நான் லோயர் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அடித்தளத்தில் இருந்தேன். பல தலைமுறைகளாக நியூயார்க் நகரத்தின் சின்னமான அடையாளங்களாக இரட்டைக் கோபுரங்கள் இருந்தன.. அவை அழிவதற்குச் சற்று முன்பு வரை அவை நிரந்தரமாக நிரந்தரமாக இருக்கும் என்பது போலவே தோன்றியது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO -
2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்! -
அப்பாடா.. இப்பதான்யா ஈரான் பிரைட்டா ஆரம்பிக்குது! ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது: அப்பாஸ் அராக்சி! -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
92,00,00,000 ரூபாய் பரிசு.. கமேனி மகன் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா! கண் சிவந்த நெதன்யாகு! பரபர! -
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய லாபம்... தங்கம் விலை உயராமல் இருக்க என்ன காரணம் தெரியுமா? -
ஈரான் மீது தரை வழி போர்.. அமெரிக்கா எடுத்த முக்கிய மூவ்! அம்பலப்படுத்திய சீனா! -
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப் -
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த பிரான்ஸ்.. மொக்கை வாங்கிய டிரம்ப்! ரொம்ப கஷ்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications