ஜெயலலிதா இறந்தது எப்போது?.. இரு வேறு பதில்களால் ஆறுமுகசாமி விசாரணையில் குழப்பம்
சென்னை: சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் சசிகலா குடும்பத்தினரும் அப்பல்லோ மருத்துவர்களும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசுஅமைத்தது.

ஆதாரங்கள்
இந்த விசாரணை கமிஷனில் அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகிகள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் என பலர் ஆஜராகி வாக்குமூலமும் தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் அளித்து வருகின்றனர்.

மாரடைப்பு
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய் நிபுணராக உள்ள டாக்சடர் பிரசாத் சந்த் ஜெயின், நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவுக்கு நவம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.

உயிரிழப்பு
அப்போது ஒரு முறை மட்டுமே இதயம் இயல்பாக இயங்கியது என தெரிவித்துள்ளார்.தார். இந்நிலையில் சசிகலா குடும்பத்தினரோ ஜெயலலிதா டிசம்பர் 4-ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவித்து வருகின்றனர். அதே நிலையில் அப்பல்லோ மருத்துவமனை ஆவணங்களில் ஜெயலலிதா 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக பதிவாகி உள்ளது.

தகவல்கள்
ஏற்கெனவே ஜெயலலிதா மரண விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளால் அதிமுக தொண்டர்களும் மக்களும் குழப்பத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாமல் ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையால் குழப்பம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications