அடிக்க போகுது ஜாக்பாட்.. அமோக காலம்.. வங்கி ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை.. விரைவில் அறிமுகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை 2 நாட்கள் விடுமுறை முறையை தங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அடுத்த மாதங்களில் அல்லது அடுத்த பட்ஜெட்டில் அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இப்போது இந்த ஒப்பந்தம் அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதனால் விரைவில் வங்கி ஊழியர்களுக்கு 5 நாட்கள் வேலை என்று அரசு அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அரசு கிரீன் சிக்னல் கொடுத்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு 5 நாட்கள் வேலை கிடைக்கும். இது நடந்தால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கிகள் திறக்கப்படும். இதுவரை அனைத்து ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

bank

5 நாட்கள் வேலை என்ற விதியால் வாடிக்கையாளர் சேவை பாதிக்காது என்று வங்கி ஊழியர் மன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன், டிசம்பர் 2023 இல் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அரசு, தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சங்கங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் 5 நாட்கள் வேலை செய்வதற்கான முன்மொழிவு இருந்தது, இது அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

அதன்பின் IBA மற்றும் வங்கி சங்கங்களின் 9வது கூட்டுக் குறிப்பு 8 மார்ச் 2024 அன்று கையொப்பமிடப்பட்டது. IBA மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கையொப்பமிட்ட கூட்டுக் குறிப்பில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையுடன் 5 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது இது குறித்து அரசு முடிவெடுக்கும், இதுபற்றி பட்ஜெட்டில் விவாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

பட்ஜெட்டுக்கு முன்பே அறிவிப்பு: முன்னதாக பட்ஜெட்டுக்கு முன்பே அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி வேலை நேரம் மற்றும் வங்கிகளின் உள் செயல்பாடு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாம். இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம் இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று சில வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். ஒப்புதல் கிடைத்ததும் சட்டத்தின் பிரிவு 25ன் கீழ் சனிக்கிழமைகள் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக அங்கீகரிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.

வேலை நேரம் மாற்றம்: அந்த அறிக்கையின்படி, அரசாங்கம் ஐந்து நாட்கள் வேலைக்கு ஒப்புதல் அளித்தால், தினசரி வேலை நேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம். இதனால் வங்கிகள் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். வங்கிகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்படும். தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. வங்கி தொழிற்சங்கங்கள் 2015 முதல் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை கோருகின்றன. 2015 இல் கையொப்பமிடப்பட்ட 10 வது இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், RBI மற்றும் அரசாங்கம் IBA உடன் உடன்பட்டு 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளை விடுமுறை தினங்களாக அறிவித்தன.

விரைவில் எல்லா சனிக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கும் சட்டம் வரலாம் என்று தகவல்கள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+