பாலகிருஷ்ணா ரெட்டி யார் தெரியுமா?.. அப்ப எந்த கட்சி தெரியுமா??
கள்ளச்சாராயத்தை ஒழிக்க போராட்டத்தை நடத்தியவர் பாலகிருஷ்ணா ரெட்டி
சென்னை: அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி யார் தெரியுமா? அன்றைக்கு பாஜகவில் ரொம்ப தீவிரமாக இருந்தவர்தான்.
அன்று கல்வீசி எறிந்துவிட்டார் என்பதற்காக அமைச்சருக்கு இன்று தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கற்களை வீசியது கலவரத்துக்காக அல்ல... வன்முறைக்காக அல்ல...
1998-ல் மதுவுக்கு எதிரான போராட்டம் அது. அன்றைய காலகட்டத்தில் ஓசூர் அருகே பாசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் வெகு ஜோராக நடந்தது.

கல்வீசப்பட்டது
அந்த கள்ளச்சாராயத்தை தடை செய்யக் கோரிதான் போராட்டம் நடந்தது. பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியது பாலகிருஷ்ண ரெட்டிதான். அந்த போராட்டத்தில்தான் பஸ்கள் மீது கல்வீசப்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.

78-வது குற்றவாளி
பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் தான் 108 பேர் மீது வழக்கு பதிய செய்யப்பட்டது. ஆனால் இதில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி 78-வது குற்றவாளிதான். ஒரு நல்ல விஷயத்துக்காக போராடியதால்தான் இந்த விவகாரமே ஆரம்பமானது.

எழுத படிக்க தெரியாது
அன்றைய நாளில் மதுவுக்கு எதிராக போராடிய பாகிருஷ்ண ரெட்டி இன்றும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால், தமிழில் பேச தெரிந்த இவருக்கு எழுத படிக்க தெரியாது என்பதுதான் உண்மை. அதிமுக சார்பாக போட்டியிடும்போதுகூட தேர்தல் சமயத்தில் இவர் தெலுங்கில் பேசிதான் ஓட்டுக்களை சேகரித்தார்.

தெலுங்கில் பேசினார்
இவர் அமைச்சராக பொறுப்பேற்றபோது, ''தமிழில் எழுத, படிக்க தெரியாத ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளதே, சட்டசபையில் தெலுங்கில் பேசுவாரா, தமிழில் பேசுவாரா? மானிய கோரிக்கையின்போது, எப்படி பதில் சொல்வார் என்றெல்லாம் பரபரப்பாக அன்றைய நாட்களில் பேசப்பட்டது. ஆனால் சட்டசபையிலே கூட தெலுங்கில் பேசிதான் ஃபேமஸ் ஆனார்.
-
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?












Click it and Unblock the Notifications