Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? உதயநிதிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் யார் என்று கேட்டால், யாருக்கும் தெரியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த அவலம், 2019ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. மாணவிகள், இளம் பெண்களுடன் நட்புடன் பழகி பின்னர் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து துன்புறுத்தி, அவர்களை ஒரு பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியது.

Who is the Sports Minister in the last 10 years of AIADMK Government Question Chief Minister MK Stalin in support Udhayanithi Stalin

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு

இதுதொடர்பாக வீடியோ வெளியாகி, அந்த பெண்களின் கதறல் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் நேற்று விசாரணை முழுவதும் முடிவடைந்து, கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகள் 9 பேரும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் vs இபிஎஸ்

இந்த தீர்ப்பு அனைத்து கட்சி நிர்வாகிகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. நேற்று இருவரும் எக்ஸ் வலைதளத்தில் மோதிக் கொண்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையிலேயே கூறி இருந்தேன். குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தாலும் சரி.. எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் சரி..

கோடநாடு வழக்கு

நிச்சயம் தண்டனை பெற்று கொடுப்போம் என்று கூறினேன். அது தற்போது நடந்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடரிலும் கூட பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று தெரிவித்தேன். இதேபோல் விரைவில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் யார்?

தொடர்ந்து விளையாட்டுத்துறை தொடர்பான கேள்விக்கு, நீலகிரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க விளையாட்டுத்துறை பணிகள் நடந்து வருகிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக யார் இருந்தார் என்று கேட்டால் கூட தெரியாது.. இப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று கேட்டால், அது அனைவருக்கும் தெரியும்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்தபின் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீரர்கள் தமிழ்நாடு வந்து போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு கட்டமைப்புகளை மேம்படுத்தி இருக்கிறோம். விளையாட்டு வீரர்கள் அதிக விருதுகளை, பெருமைகளையும் தமிழ்நாட்டுக்கு சேர்த்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+