சென்னை தலைமை செயலக கட்டிடம்.. செயின்ட் ஜார்ஜ் கோட்டை யாருக்கு சொந்தம்? ஆர்டிஐயில் வெளிவந்த தகவல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டிடம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்றும் வாடகை அடிப்படையில் இந்த கட்டிடம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. தமிழக சட்டசபை கூட்டம், அரசின் முக்கியத்துறைகள் அனைத்தும் இந்த தலைமைச் செயலகத்தில் தான் அமைந்துள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவையும் இந்த கட்டிடத்தில் உள்ளது.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வகுப்பது, செயல்படுத்துவது என பெரும்பாலான பணிகள் தலைமைச் செயலகத்தில் இருந்து தான் நடைபெறும். பல சினிமாக்களிலும் பிரம்மாண்டமாக காட்டப்படும் தலைமைச் செயலக கட்டிடத்தை சென்னைக்கு வந்தால் மறக்காமல் சென்று பிரம்மிப்புடன் மக்கள் பார்த்து செல்வதை பார்க்க முடியும். பாரம்பரிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலக கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ..
கடந்த 1644 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டது. 350 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பெருமைகளுடன் கம்பீரமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை காட்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதி இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்றும் ஏதேனும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டிடங்கள் எதுவும் கட்ட வேண்டும் என்றாலும் கூட ராணுவத்தில் முறையாக அனுமதி பெற்ற பிறகு அதைச் செய்ய முடியும்.
வாடகை அடிப்படையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் தமிழக அரசுக்கு சொந்தமானதா? அல்லது இந்திய ராணுவத்திற்கு சொந்தமானவையா? என்று சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார். .
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தலைமைச் செயலக கட்டிடம் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்களின் விபரம் உள்ளிட்ட குறித்து வேறு எந்த தகவலும் கூறப்படவில்லை.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications