கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன்
சென்னை: கோயமுத்தூர் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 29ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்றனர். எனினும், தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரும் முக்கிய நிர்வாகியுமான அண்ணாமலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன் என்ற கேள்விக்கு பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இம்முறை போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அவரது பங்கேற்பின்மைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், "நான் வந்த உடனேயே அண்ணாமலை எப்போது வருகிறார்? என்று கேட்டேன். அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு தான் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை என்று தகவல் கூறினார்கள். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தனித்தனி ஆதரவாளர்கள் என்று எதுவும் கிடையாது. அண்ணாமலையின் அன்புக் கூட்டத்தில் நாங்களும் இருக்கிறோம். அவர் எனக்கு அன்புக்குரிய தம்பி. தேர்தலில் இன்னும் வேட்பாளர்கள் கூட அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசுவது அவசியமே இல்லை.
பாஜக போன்ற ஒரு கட்டுக்கோப்பான கட்சியில் எந்த நேரத்தில், யாருக்கு, என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு நன்கு தெரியும். ஒரு சிலருக்கு கட்சிப் பொறுப்புகள், ஒரு சிலருக்கு எம்எல்ஏ அல்லது எம்பி தொகுதிகள் வழங்கப்படலாம். இவையனைத்தும் அப்படித்தான் வழங்கப்படும்.
கட்சியில் சாதாரண தொண்டர்கள் கூட பொறுப்புகளை எதிர்ப்பது இயல்பு என்றும், யார் வெற்றி வாய்ப்பை கொண்டு வருவார்கள் என்பது போன்ற பல அம்சங்கள் தேர்தல் அரசியலில் கட்சிக் தலைமைக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியபோது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. அதன் பிறகு, அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்னரே கூட்டணி மீண்டும் உருவானது. அதிமுக தலைவர்களுடன் முரண்பட்ட போக்கைக் கொண்டிருந்த அண்ணாமலைக்கு தற்போது வரை முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளது.
இதுவும் அண்ணாமலையின் அதிருப்திக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது அண்ணாமலை வெளியூரில் இருந்ததால் அவரால் வரவேற்க நேரில் வரமுடியவில்லை" என விளக்கினார்.
கோவைக்கு வந்த பிரதமரை வரவேற்காதது குறித்து கடந்த சில தினங்களாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுவரை அண்ணாமலை ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications