Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினாவில் 2 மணி நேரம்.. சாலையில் கிடந்து உயிருக்கு போராடிய நபர் மரணம்.. போலீஸ் எங்கே? என்ன கொடுமை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை, பாதுகாப்பு பணிகளை செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வைக்கப்படுகின்றன.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024

நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார். இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேர் இந்த நிகழ்வில் பலியாகி உள்ளனர் .

மெரினா: மெரினாவில் நிகழ்ந்த கார்த்திகேயன் என்பவரின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் போலீசார் கொஞ்சம் கூட கவனமின்றி செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இவர் தனது மனைவி குழந்தையை மெரீனாவில் உள்ள முத்தமிழ் அறிஞர் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு.. அங்கிருந்து பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

பார்க்கிங்கிற்கு சென்றவர் 2 மணி நேரமாக வரவில்லை. அவர் பார்க்கிங் அருகே மூச்சு திணறி , நீர் இழப்பு ஏற்பட்டு கண்கள் பாதி மூடிய நிலையில் படுத்து கிடந்துள்ளார். நீர் இழப்பு ஏற்பட்டு அங்கேயே வாந்தியும் எடுத்துள்ளார். 2 மணி நேரமாக அவர் அங்கேயே உயிருக்கு போராடியபடி அங்கேயே இருந்துள்ளார். அவரை ஒரு போலீசார் கூட மீட்கவில்லை. ஒரு நபர் கூட காப்பாற்றவில்லை. ஏன் ஆம்புலன்ஸ் கூட கூட்டம் காரணமாக வரவில்லை.

2 மணி நேரத்திற்கு பின் விஷயம் தெரிந்து கார்த்திகேயனின் மனைவி அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போய் அவர் ஆம்புலன்ஸை வரவழைத்தும் கூட அது நேரத்திற்கு வரவில்லை. 3 மணி நேரத்திற்கு பின்பே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்தது. அவரை ஒரு போலீசார் கூட காப்பாற்ற வரவில்லை. 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் இருந்தனர் என்றால் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

போலீசார்.. அதிகாரிகள்.. அரசு தரப்பு நிர்வாகிகள் எங்கே இருந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசாரின் செயல் இதில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

புகார்: சென்னை விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றவர்கள் 5 பேர் மரணம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழக போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் பலியான சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று சென்னையில் மிக சிறப்பாக விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் மரணம், அரசு சரியாக திட்டமிடவில்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+