அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை.. மீண்டும் பாஜகவில் புகைச்சல்.. பொன்னார் ஆதரவாளர் தாவிய பின்னணி!
பாஜகவில் பொன்னார் ஆதரவாளராக இருந்த சிவபாலன், அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : பாஜகவில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் திமுக அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாகவும் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சிவபாலன் கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்புக்கு வந்தது முதலே அவர் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியினர் அதைச் சொல்லி விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை மீதான அதிருப்தியில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
குமரி மாவட்ட பாஜகவில் தீவிரமாக இயங்கி வந்த சிவபாலன் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த நிலையில், அவர் அண்ணாமலை மீது புகார் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோஷ்டி மோதல்
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றது முதலே, சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. தனக்கு ஆதரவான இளைஞர்களையே கட்சியின் அனைத்து மட்டத்திலும் பொறுப்புக்கு கொண்டு வர அண்ணாமலை முயற்சிப்பதாகவும், அதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகத்திற்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால், அண்மையில் கட்சிக்குள் சில மோதல்களும் ஏற்பட்டன.

அதிருப்தி
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து தேசிய தலைமை, தமிழ்நாடு மாநில நிர்வாகிகளிடம் பேசியது. அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சுமூக நிலை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் பாஜகவில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவில் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வலம் வந்த பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன், திமுக அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

பாஜக டூ திமுக
சிவபாலன், பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகச் செயல்பட்டவர். பொன்.ராதாகிருஷ்ணன் - அண்ணாமலை இடையிலேயே முரண்கள் இருந்து வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சிவபாலன், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குமரி மாவட்ட பாஜக - திமுக இடையே நீண்டகாலமாக தொடர் மோதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் பாஜகவில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளார் சிவபாலன்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
திமுகவில் இணைந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவபாலன், "திமுக சமூகநீதி, மதச்சார்பின்மை என அனைவருக்குமான பாதையில் பயணிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக. அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது. ஜி.எஸ்.டி வருவாயில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்குகின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதை விட்டுவிட்டு மக்களிடையே பிரச்சனைகள் ஏற்படும் வகையில் பேசி வருகிறார். பாஜக தொடர்ந்து சாதி, மதம், மாநிலம் ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

சீனியர்களுக்கு மரியாதை இல்லை
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசியல் செய்கிறது. நான் பாஜகவில் 20 ஆண்டுகளாக வேலை செய்து இருக்கிறேன். பாஜக இளைஞரணியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தேன். அண்ணாமலை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மெச்சும்படி உள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜின் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால் திமுகவில் இணைந்தேன்" என்றார்.
-
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications