சென்னை ஈசிஆர் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மணல்! கடலிலும் மாற்றம்! பொதுமக்கள் அச்சம்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளில் மணல் கருப்பு நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இந்த மண்ணை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்றாலே பிரம்மாண்டம்தான். நீளமான சாலையில் ஆங்காங்கே தெரியும் கடற்கரை, சவுக்கு தோப்பு, ஜில்லென்று வீசும் காற்று, நடுநடுவே வரும் ஊர்கள் என அழகாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமைதியாக இருக்கும்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை ரசித்துவிட்டு செல்வது வழக்கம்.
அது போல் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மீன்களை வாங்கவும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது.
இதனால் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பாகவே காணப்படுகிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், கடலில் இருந்து ஏதோ கழிவுகள் ஒதுங்கியிருப்பதாக கடற்கரையில் கால் வைக்கவே அச்சப்பட்டு மணல் திட்டுகளிலேயே அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். மேலும் அந்த கழிவுகளால் நோய் பரவுமோ என்ற அச்சம் வேறு நிலவுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை , கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடற்கரையின் மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு அடியில் உள்ள கருப்பு மண்ணை வெளிப்படுத்தும்.
இது பொதுவாக ஆடி முடிந்து ஆவணி மாதங்களில் மண் கருப்பு நிறத்தில் வெளியேறும். எனவே இது இயல்பானது. இதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அது போல் டிசம்பர் மாதம், வடகிழக்கு பருவமழை வரை கடற்கரையில் மணல் கருப்பு நிறமாக மாறுவதால் ஆமைகளுக்கும் மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த நோய்த் தொற்றும் ஏற்படாது என்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications