சென்னை ஈசிஆர் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மணல்! கடலிலும் மாற்றம்! பொதுமக்கள் அச்சம்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளில் மணல் கருப்பு நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இந்த மண்ணை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்றாலே பிரம்மாண்டம்தான். நீளமான சாலையில் ஆங்காங்கே தெரியும் கடற்கரை, சவுக்கு தோப்பு, ஜில்லென்று வீசும் காற்று, நடுநடுவே வரும் ஊர்கள் என அழகாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமைதியாக இருக்கும்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை ரசித்துவிட்டு செல்வது வழக்கம்.
அது போல் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மீன்களை வாங்கவும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது.
இதனால் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பாகவே காணப்படுகிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், கடலில் இருந்து ஏதோ கழிவுகள் ஒதுங்கியிருப்பதாக கடற்கரையில் கால் வைக்கவே அச்சப்பட்டு மணல் திட்டுகளிலேயே அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். மேலும் அந்த கழிவுகளால் நோய் பரவுமோ என்ற அச்சம் வேறு நிலவுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை , கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடற்கரையின் மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு அடியில் உள்ள கருப்பு மண்ணை வெளிப்படுத்தும்.
இது பொதுவாக ஆடி முடிந்து ஆவணி மாதங்களில் மண் கருப்பு நிறத்தில் வெளியேறும். எனவே இது இயல்பானது. இதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அது போல் டிசம்பர் மாதம், வடகிழக்கு பருவமழை வரை கடற்கரையில் மணல் கருப்பு நிறமாக மாறுவதால் ஆமைகளுக்கும் மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த நோய்த் தொற்றும் ஏற்படாது என்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications