Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆர் கடற்கரையில் கருப்பு நிறத்தில் காணப்படும் மணல்! கடலிலும் மாற்றம்! பொதுமக்கள் அச்சம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளில் மணல் கருப்பு நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இந்த மண்ணை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்குள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை என்றாலே பிரம்மாண்டம்தான். நீளமான சாலையில் ஆங்காங்கே தெரியும் கடற்கரை, சவுக்கு தோப்பு, ஜில்லென்று வீசும் காற்று, நடுநடுவே வரும் ஊர்கள் என அழகாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமைதியாக இருக்கும்.

ecr beach sand

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில்தான் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடற்கரைக்கு தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் வந்து இயற்கையை ரசித்துவிட்டு செல்வது வழக்கம்.

அது போல் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மீன்களை வாங்கவும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பனையூர், உத்தண்டி, அக்கரை, நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் உள்ள மணல் பரப்பு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக திடீரென கருப்பு நிறத்தில் மாறி காணப்படுகிறது.

இதனால் மணல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பாகவே காணப்படுகிறது. இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், கடலில் இருந்து ஏதோ கழிவுகள் ஒதுங்கியிருப்பதாக கடற்கரையில் கால் வைக்கவே அச்சப்பட்டு மணல் திட்டுகளிலேயே அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். மேலும் அந்த கழிவுகளால் நோய் பரவுமோ என்ற அச்சம் வேறு நிலவுகிறது.

இதுகுறித்து மீனவர்கள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் கடற்கரை மணற்பரப்பு பொதுவாக பழுப்பு, வெள்ளை , கருப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் அடுக்குகளாக இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது கடற்கரையின் மணற்பரப்பின் மேல் அடுக்கில் உள்ள வெள்ளை நிற மணல், அரிப்பு ஏற்பட்டு அடியில் உள்ள கருப்பு மண்ணை வெளிப்படுத்தும்.

இது பொதுவாக ஆடி முடிந்து ஆவணி மாதங்களில் மண் கருப்பு நிறத்தில் வெளியேறும். எனவே இது இயல்பானது. இதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அது போல் டிசம்பர் மாதம், வடகிழக்கு பருவமழை வரை கடற்கரையில் மணல் கருப்பு நிறமாக மாறுவதால் ஆமைகளுக்கும் மீன்களுக்கும் மற்றும் சில உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த நோய்த் தொற்றும் ஏற்படாது என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+