மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் விசாரணைக்கு ஆளுநர் மறுப்பதன் பின்னணியில் அண்ணாமலை? ஜோதிமணி கேள்வி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் விசாரணைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பதன் பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவரது பதவி காலத்தில் போக்குவரத்துத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து ஜி.பி.எஸ் கருவிகளை வாங்குவதில் ஊழல் முறைகேடு நடைபெற்றது; பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையும் நடத்தி இருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளுக்கு ஒப்புதல் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இந்த கோப்பு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது.

ஆளுநர் அனுமதி: இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது; எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகை கோப்புகள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கேசி வீரமணி, எம். ஆர் .விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார். இதில் சி.விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு ஒப்புதல் தந்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அண்ணாமலை காரணமா?: ஆனால் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருக்கிறார். இதன் மர்மம் என்ன? 6.7.2023-ல் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய கோப்பு எதுவும் வரவில்லை என்கிறது. ஆனால் தற்போது மே மாதம் 15-ந் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய கோப்பு வந்துவிட்டது என்கிறார். இப்போது வரை எம்.ஆர். விஜயபாஸ்கர் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்கிற கேள்வியை கேட்காமல் தவிர்க்க முடியாது எனவும் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications