நடிகர் சூர்யா மீது அப்பா சிவகுமார் கடும் கோபம்? ஜெய்பீம் பட விவகாரத்தில் தலையிடாததன் பரபர பின்னணி!
சென்னை: ஜெய்பீம் பட சர்ச்சைகள் தொடர்பாக திடீரென இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணிதான் இப்போது திரைத்துறையில் ஹாட் டாப்பிக்காக உலா வருகிறது.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகம் காயப்படுத்தப்பட்டிருப்பதாக சூர்யாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெடித்த சர்ச்சைகள் அனேகமாக இயக்குநர் ஞானவேலின் வருத்தம் தெரிவித்துள்ள அறிக்கைக்கு பின்னர் ஓயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திரைத்துறையில் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்து சில விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

நடிகர் சிவகுமார் அட்வைஸ்
ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவுக்கும் அவரது தந்தை சிவக்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 'பெரும்பான்மை சமூகத்தை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம்; படத்தை தயாரிக்கும் போதே இந்த மாதிரியான பிரச்சனைகளில் கவனமாக இருந்திருக்க வேண்டும் ' என்று சொல்லி, வருத்தம் தெரிவிக்க சூர்யாவை வலியுறுத்தினாராம் சிவக்குமார்.

ஜோதிகா பிடிவாதமா?
ஆனால், சூர்யாவோ இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் சுமூகமான சூழல் தற்போது இல்லை எனவும் கூறப்படுகிறது. சூர்யாவைப் பொறுத்தவரையில் மனைவி ஜோதிகா சொல்லே மந்திரம். இதைத் தெரிந்துதான் சூர்யாவுக்கு, சிவக்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

கார்த்தி திரைப்படங்களுக்கும் சிக்கல்?
இதனிடையே திரைத்துறையை சேர்ந்த வன்னியர். சமூகத்தினரிடம் இந்த விவகாரம் குறித்து சூர்யா கருத்து கேட்டுள்ளார். அப்போது, எங்களை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். அதனால நீங்க கேட்டதற்காக சொல்கிறோம். இந்த சர்ச்சையை ஆரம்பத்திலேயே முடித்திருக்க வேண்டும். இந்தளவுக்கு வளரவிட்டிருக்கக் கூடாது. வன்னிய சமூக இளைஞர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஏதோ, இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்திருப்பதால் விளைவுகள் தெரியவில்லை. இனி நீங்க எடுக்கப் போகும் எல்லா படத்தையும் ஓ.டி.டி.யிலேயே ரிலீஸ் செய்து விடுவீர்களா? தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டீர்களா? அப்போதுதான் உங்களுக்கு பாதிப்பின் விளைவுகள் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் தம்பி கார்த்தியின் படத்துக்கும் சிக்கல் உருவானால் என்ன பண்ணுவீர்கள் ? இன்றைக்கு உங்களுக்கு ஆதரவா நிற்கிற சினிமா புள்ளிகள் பிரச்சனையின்னு வரும்போது நிற்பார்களான்னு தெரியாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஞானவேல் அறிக்கை
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேலுவை தொடர்பு கொண்டு பேசினாராம் நடிகர் சூர்யா. இதனடிப்படையில்தான் ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாராம். இருந்தபோதும் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்திருந்தால் காயப்படுத்தப்பட்ட எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இதனையும் இப்போதைக்கு சமாதானமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனராம் பாமக மூத்த தலைவர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications