நடிகர் சூர்யா மீது அப்பா சிவகுமார் கடும் கோபம்? ஜெய்பீம் பட விவகாரத்தில் தலையிடாததன் பரபர பின்னணி!
சென்னை: ஜெய்பீம் பட சர்ச்சைகள் தொடர்பாக திடீரென இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணிதான் இப்போது திரைத்துறையில் ஹாட் டாப்பிக்காக உலா வருகிறது.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகம் காயப்படுத்தப்பட்டிருப்பதாக சூர்யாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெடித்த சர்ச்சைகள் அனேகமாக இயக்குநர் ஞானவேலின் வருத்தம் தெரிவித்துள்ள அறிக்கைக்கு பின்னர் ஓயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திரைத்துறையில் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்து சில விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

நடிகர் சிவகுமார் அட்வைஸ்
ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவுக்கும் அவரது தந்தை சிவக்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 'பெரும்பான்மை சமூகத்தை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம்; படத்தை தயாரிக்கும் போதே இந்த மாதிரியான பிரச்சனைகளில் கவனமாக இருந்திருக்க வேண்டும் ' என்று சொல்லி, வருத்தம் தெரிவிக்க சூர்யாவை வலியுறுத்தினாராம் சிவக்குமார்.

ஜோதிகா பிடிவாதமா?
ஆனால், சூர்யாவோ இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் சுமூகமான சூழல் தற்போது இல்லை எனவும் கூறப்படுகிறது. சூர்யாவைப் பொறுத்தவரையில் மனைவி ஜோதிகா சொல்லே மந்திரம். இதைத் தெரிந்துதான் சூர்யாவுக்கு, சிவக்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

கார்த்தி திரைப்படங்களுக்கும் சிக்கல்?
இதனிடையே திரைத்துறையை சேர்ந்த வன்னியர். சமூகத்தினரிடம் இந்த விவகாரம் குறித்து சூர்யா கருத்து கேட்டுள்ளார். அப்போது, எங்களை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். அதனால நீங்க கேட்டதற்காக சொல்கிறோம். இந்த சர்ச்சையை ஆரம்பத்திலேயே முடித்திருக்க வேண்டும். இந்தளவுக்கு வளரவிட்டிருக்கக் கூடாது. வன்னிய சமூக இளைஞர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஏதோ, இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்திருப்பதால் விளைவுகள் தெரியவில்லை. இனி நீங்க எடுக்கப் போகும் எல்லா படத்தையும் ஓ.டி.டி.யிலேயே ரிலீஸ் செய்து விடுவீர்களா? தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டீர்களா? அப்போதுதான் உங்களுக்கு பாதிப்பின் விளைவுகள் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் தம்பி கார்த்தியின் படத்துக்கும் சிக்கல் உருவானால் என்ன பண்ணுவீர்கள் ? இன்றைக்கு உங்களுக்கு ஆதரவா நிற்கிற சினிமா புள்ளிகள் பிரச்சனையின்னு வரும்போது நிற்பார்களான்னு தெரியாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஞானவேல் அறிக்கை
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேலுவை தொடர்பு கொண்டு பேசினாராம் நடிகர் சூர்யா. இதனடிப்படையில்தான் ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாராம். இருந்தபோதும் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்திருந்தால் காயப்படுத்தப்பட்ட எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இதனையும் இப்போதைக்கு சமாதானமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனராம் பாமக மூத்த தலைவர்கள்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications