நடிகர் சூர்யா மீது அப்பா சிவகுமார் கடும் கோபம்? ஜெய்பீம் பட விவகாரத்தில் தலையிடாததன் பரபர பின்னணி!
சென்னை: ஜெய்பீம் பட சர்ச்சைகள் தொடர்பாக திடீரென இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணிதான் இப்போது திரைத்துறையில் ஹாட் டாப்பிக்காக உலா வருகிறது.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகம் காயப்படுத்தப்பட்டிருப்பதாக சூர்யாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வெடித்த சர்ச்சைகள் அனேகமாக இயக்குநர் ஞானவேலின் வருத்தம் தெரிவித்துள்ள அறிக்கைக்கு பின்னர் ஓயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் திரைத்துறையில் ஞானவேலின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்து சில விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

நடிகர் சிவகுமார் அட்வைஸ்
ஜெய்பீம் விவகாரத்தில் சூர்யாவுக்கும் அவரது தந்தை சிவக்குமாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, 'பெரும்பான்மை சமூகத்தை வம்புக்கு இழுத்திருக்க வேண்டாம்; படத்தை தயாரிக்கும் போதே இந்த மாதிரியான பிரச்சனைகளில் கவனமாக இருந்திருக்க வேண்டும் ' என்று சொல்லி, வருத்தம் தெரிவிக்க சூர்யாவை வலியுறுத்தினாராம் சிவக்குமார்.

ஜோதிகா பிடிவாதமா?
ஆனால், சூர்யாவோ இதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் சுமூகமான சூழல் தற்போது இல்லை எனவும் கூறப்படுகிறது. சூர்யாவைப் பொறுத்தவரையில் மனைவி ஜோதிகா சொல்லே மந்திரம். இதைத் தெரிந்துதான் சூர்யாவுக்கு, சிவக்குமார் அட்வைஸ் செய்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

கார்த்தி திரைப்படங்களுக்கும் சிக்கல்?
இதனிடையே திரைத்துறையை சேர்ந்த வன்னியர். சமூகத்தினரிடம் இந்த விவகாரம் குறித்து சூர்யா கருத்து கேட்டுள்ளார். அப்போது, எங்களை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள். அதனால நீங்க கேட்டதற்காக சொல்கிறோம். இந்த சர்ச்சையை ஆரம்பத்திலேயே முடித்திருக்க வேண்டும். இந்தளவுக்கு வளரவிட்டிருக்கக் கூடாது. வன்னிய சமூக இளைஞர்கள் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஏதோ, இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்திருப்பதால் விளைவுகள் தெரியவில்லை. இனி நீங்க எடுக்கப் போகும் எல்லா படத்தையும் ஓ.டி.டி.யிலேயே ரிலீஸ் செய்து விடுவீர்களா? தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டீர்களா? அப்போதுதான் உங்களுக்கு பாதிப்பின் விளைவுகள் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் தம்பி கார்த்தியின் படத்துக்கும் சிக்கல் உருவானால் என்ன பண்ணுவீர்கள் ? இன்றைக்கு உங்களுக்கு ஆதரவா நிற்கிற சினிமா புள்ளிகள் பிரச்சனையின்னு வரும்போது நிற்பார்களான்னு தெரியாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் ஞானவேல் அறிக்கை
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேலுவை தொடர்பு கொண்டு பேசினாராம் நடிகர் சூர்யா. இதனடிப்படையில்தான் ஞானவேல் தற்போது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாராம். இருந்தபோதும் நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்திருந்தால் காயப்படுத்தப்பட்ட எங்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இதனையும் இப்போதைக்கு சமாதானமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனராம் பாமக மூத்த தலைவர்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications