ஜெ. ஆட்சியில் சட்டசபையில் வேட்டியை உருவினார்கள்.. பேண்ட்டுக்கு மாற காரணம் சொன்ன பரிதி இளம்வழுதி!
Recommended Video

சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் சட்டசபையில் வேட்டியை உருவிவிட்டார்கள் என்பதற்காக பேண்ட் அணிய ஆரம்பித்ததாக கூறியவர் பரிதி இளம்வழுதி என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது?
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பரிதி இளம்வழுதி, கடந்த 1991ம் ஆண்டு திமுக சார்பில் சட்டசபைக்கு சென்ற ஒரே தலைவராகும். துறைமுகம் தொகுதியில் வென்ற கருணாநிதி, திமுகவின் மோசமான தோல்விக்கு, பொறுப்பேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், பரிதி இளம்வழுதி மட்டுமே சட்டசபைக்கு திமுக சார்பில் செல்ல வேண்டிய நிலை.
அப்போது அதிமுக அரசிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. இதனால், அதிமுகவினரிடம் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.
[தனி நபராக சட்டசபை புகுந்து ஜெயலலிதாவையே கலங்கடித்த 'இந்திரஜித்' பரிதி இளம்வழுதி!]

பேண்ட், சட்டை
இந்த நிலையில்தான், திடீரென வேட்டி, சட்டை என்ற அரசியல்வாதிக்கு உரித்தான ஆடை கலாச்சாரத்திலிருந்து, பேண்ட், சட்டைக்கு மாறினார், பரிதி இளம்வழுதி. அந்த காலகட்டத்தில் பேண்ட், சட்டை போட்ட தமிழக அரசியல்வாதியை பார்ப்பது அரிது. இதன்பிறகாவது இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பாமக வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் போன்ற சிலர் பேண்ட் அணிந்து சட்டசபை வந்தனர். ஆனால் இந்த மாற்றத்திற்கு வித்திட்டது என்னவோ, பரிதி இளம்வழுதிதான்.

பெல்ட்டை கட்டிக்கொண்டேன்
இதுகுறித்து ஒரு சுவாரசிய தகவலை பின்னர், பரிதி இளம்வழுதி பகிர்ந்து கொண்டார். சென்னை பெரியார் திடலில், நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றபோதுதான், அந்த உண்மையை போட்டு உடைத்தார், பரிதி இளம்வழுதி. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள். அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். விழாவில் பங்கேற்றவர்கள் இதை கேட்டு குலுங்கி சிரித்துவிட்டனர்.

துணிவு கிடைத்தது
அந்த அராஜகத்தை, கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்றால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று, திமுகவில் இருந்தது குறித்து பெருமையாக பேசினார்.

பெல்ட்டை கட்டிக்கொண்டேன்
இதுகுறித்து ஒரு சுவாரசிய தகவலை பின்னர், பரிதி இளம்வழுதி பகிர்ந்து கொண்டார். சென்னை பெரியார் திடலில், நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றபோதுதான், அந்த உண்மையை போட்டு உடைத்தார், பரிதி இளம்வழுதி. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள். அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். விழாவில் பங்கேற்றவர்கள் இதை கேட்டு குலுங்கி சிரித்துவிட்டனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications