தமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா? ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா?
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகை தந்த பிரதமர் மோடி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழக பாஜகவில் வாசனை இணைத்து அவரை தலைவராக்கும் முயற்சிகளின் அடுத்த கட்டமாகத்தான் மோடி சிக்னல் காட்டினாரா என விவாதிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸில் இருந்த போது ராகுல் காந்தியுடன் முறைத்துக் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் ஜிகே வாசன். ஆனால் கட்சி என்னவோ போனியாகவில்லை.
இதனால் திரும்பவும் காங்கிரஸ் ஜோதியில் கலந்துவிட பகீரத முயற்சிகளை எடுத்துப் பார்த்தால் வாசன். மாஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை முன்வைத்தும் கூட முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. ராகுல் இம்மியும் அசைந்து கொடுக்கவில்லை.

காங்கிரஸ் முட்டுக்கட்டை
இதனால் ரொம்பவே வெறுத்துப் போனார் வாசன். ஒரு கட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் முயற்சித்தார். அதற்கும் காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டது. இதனால் அதிமுக-பாஜக அணிதான் எதிர்காலாம் என்பதை புரிந்து கொண்டார் வாசன்.

தமிழக பாஜகவில் ஐக்கியம்?
அதேநேரத்தில் தமிழக பாஜகவில் வாசன் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுத்தது டெல்லி மேலிடம் வாசனுக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமான தொழிலதிபர் மூலமாக பல முறை டெல்லி மேலிடம் முயற்சித்து பார்த்தது.

நடத்தப்படும் பேச்சுவார்த்தை
ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமலேயே காலம் கடத்தி வந்தார் வாசன். ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளை பாஜக மேலிடம் நடத்துவோம் என களமிறங்கிவிட்டது. இதனால் தமிழக பாஜகவுக்கு வாசன் தலைவராகக் கூடும் எனவும் கூறப்பட்டு வந்தது.

மோட்டியின் நெருக்கமான பேச்சு
இந்த யூகங்களை உறுதியாக்கும் வகையில் ஜிகே வாசனிடம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். டெல்லிக்கு வந்து தம்மை கட்டாயம் சந்திக்க வேண்டும்; காத்திருப்பேன் எனவும் கூறினார்.

அரசியல் விவாதம்
இது அதிமுக, பாஜக பிரமுகர்களுக்கு கொஞ்சம் எதிர்பாராத ஒன்றாகத்தான் இருந்ததாம். பெரிய செல்வாக்கு இல்லாத வாசனுக்கு மோடி கொடுத்திருக்கும் இந்த முக்கியத்தும் வாசனை பாஜக வளைத்துவிட்டதை வெளிப்படுத்துகிற சிக்னலா? என அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications