Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூட்டையை கட்டுங்க.. ரெடியான ஹெலிகாப்டர்ஸ்.. லோக்சபா தேர்தலை டிசம்பரில் நடத்த மோடி பிளான்? ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

Why PM Modi is planning to go for early Lok Sabha election? Will it happen in December month?

எதிர்பக்கம் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி இணைந்து வலிமை அடைந்து வருகின்றன.

இந்தியா கூட்டணி அச்சம்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், லோக்சபா தேர்தல் திட்டமிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கடந்த ஏழு மாதங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதை சிலர் நாட்டில் எதையும் செய்யும் திறன் கொண்டவர்கள். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம்.

நாங்கள் மும்பைக்குச் செல்கிறோம், நாட்டின் அதிகபட்ச எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை என்னிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதவியிலும் விருப்பமில்லை. லோக்சபா தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடக்கலாம். அதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன, என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பாஜக ஏற்கனவே அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துள்ளது, இதனால் வேறு எந்த அரசியல் கட்சியும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு "எதேச்சதிகார ஆட்சியை" எதிர்கொள்ளும்.

அவர்கள் (பாஜக) லோக்சபா தேர்தலை 2023 டிசம்பரில் அல்லது ஜனவரியில் நடத்தலாம் என்று நான் பயப்படுகிறேன். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு எதேச்சதிகார ஆட்சியை சந்திக்கும், என்று அவர் கூறியுள்ளார்.

மோடி திட்டம்: லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதன்படி இந்த வருடமே.. இறுதியில் தேர்தலை நடத்த அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் அதாவது மே மாதம் தேர்தலை நடத்த மோடி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. இந்தியா கூட்டணி மேலும் வலிமைடையாமல் தடுக்க முடியும்.

2. இந்தியா கூட்டணி முறையாக திட்டங்களை வகுக்கும் முன் தேர்தலை நடத்தலாம்.

3. கள நிலவரம் எதிரணிக்கு ஆதரவாக மாறும் முன் தேர்தலை சந்திக்க முடியும் உள்ளிட்ட காரணங்களால் அமைச்சரவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டு வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+