சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்?
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் மாதம் ஒரு கொலை நடந்தாலே அதிர்ச்சி தரும்.. ஆனால் இப்போதோ தினம் 2-3 கொலைகள், 10-12 பலாத்காரம் என்று நிலைமை கைமீறிக்கொண்டு இருக்கிறது. முதல்வர் விஜய்யின் தவெக அரசால் இதை கட்டுப்படுத்தவோ.. கடுமையான தண்டனைகளை கொடுக்கவோ முடியவில்லை. இந்த நிலையில்தான் விஜய் உள்துறை பொறுப்பை கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்போதைய அமைச்சரவைக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாகத் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரங்கேறிய அடுத்தடுத்த குற்றச்சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையின் வணிக மையமான டி.நகரில் நடைபெற்ற 96 சவரன் கொள்ளை, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டியில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடூர பலாத்கார வன்முறைகள் எனத் தொடரும் குற்றங்களால் எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
நெருக்கடியில் முதலமைச்சர் விஜய்:
தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், காவல்துறை மற்றும் உள்துறையைத் தன் வசம் வைத்துள்ளார். எனினும், ஆட்சி மாற்றத்தின் தொடக்கக் காலத்திலேயே கட்டுக்கடங்காமல் எழும் இந்த சட்டஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாள்வதில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாகத் தெரிகிறது. முதலமைச்சர் என்ற முறையில் நிர்வாகம், கொள்கை முடிவுகள், மக்கள் நலத் திட்டங்கள் எனப் பல்வேறு துறைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய உள்துறையைத் தனி ஒரு அமைச்சரிடம் ஒப்படைப்பதுதான் நிர்வாக ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும் என்று முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையை முழுநேரமாகக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தகுதியான, ஆளுமை மிக்க ஒருவருக்கு இந்த இலாக்காவை வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
ரேஸில் முன்னணியில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா:
முதல்வர் விஜய் தனது சுமையைக் குறைத்துக் கொள்ள உள்துறையைத் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அந்தப் பொறுப்புக்கு தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும், தற்போதைய பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் பெயர் முதன்மையாக அடிபடுகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, கட்சியின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார்.
அரசியல் உத்திகளை வகுப்பதிலும், தேர்தல் களத்தை ஒருங்கிணைப்பதிலும் நிர்வாகத் திறமையை நிரூபித்த ஆதவ் அர்ஜுனாவிடம், தற்போதைய சூழலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை முழுநேரமாக ஒப்படைத்தால், காவல்துறை நிர்வாகம் இன்னும் வேகம் பெறும் என்று தவெக-வின் உயர்மட்டக் குழு கருதுகிறது.
ஒரே இலாக்கா - முழுமையான கவனம்:
தற்போது பொதுப்பணித்துறை (PWD) மற்றும் நெடுஞ்சாலைத் துறையைக் கவனித்து வரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு, உள்துறையை 'சிங்கிள் போர்ட்ஃபோலியோ' (Single Portfolio) அதாவது தனி ஒரு இலாக்காவாக மட்டும் வழங்கி, காவல்துறையைச் சீரமைக்கும் முழு அதிகாரத்தையும் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், தினசரி எழும் குற்றச்சம்பவங்களுக்குத் தனி கவனம் செலுத்தி, குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்படும்.
இந்த அதிரடி அமைச்சரவை மாற்றம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் சட்டஒழுங்கு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவெக தலைமை வியூகம் வகுத்து வருவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை!












Click it and Unblock the Notifications