தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறதா? ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை
சென்னை: வரும் ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை வாரியம் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து இருப்பதால், வரும் ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதியாகும். மின் உற்பத்திக்கு ஆகின்ற செலவு, மின்சார வாரியத்தின் கடன் 1.5 லட்சத்துக்கும் மேலாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஒழுங்குமுறை ஆணையமானது இந்த மின் கட்டணத்தை உயர்த்த கூறியிருந்தது.

இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டணமானது பெரிய அளவில் உயர்ந்து இருந்தது. இதையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்து இருந்தது. வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் என பல பயன்பாடுகளுக்கும் மின் கட்டணம் உயர்ந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் அதிகரித்தது.
இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திலும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. கடன், உற்பத்தி உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு நடப்பு ஆண்டு 3 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை அளித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தினால் தான் கடனை குறைக்க முடியும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், மின் கட்டணம் உயர்வு என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என்றும், மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை கொடுத்தாலும், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்றும் அவர் கூறினார். வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!












Click it and Unblock the Notifications