ஆளுநரின் அந்த சிரிப்பு! காதுக்கு தகவல் வந்ததும் ரவி அப்படி செய்தாரா? அதுக்கு என்னங்க அர்த்தம்? பரபர!
சென்னை: துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊட்டியில் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நடத்தினார் கவர்னர் ரவி. தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த தனிப்பட்ட மாநாட்டை விரும்பவில்லை.
இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இணை வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடிக்கு இது தொடர்பான அழைப்பு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மசோதா
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது. இதனால்தான் ஆளுநர் இப்படி செய்கிறார் என்பது உணர்ந்து கொண்ட தமிழ்நாடு அரசு துணை வேந்தர்கள் நியமனம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்தது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, மாநில அரசுக்கே அதிகாரம் என்பதாக சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் நிறைவேற்றியது ஆளும் திமுக.

ஒப்புதல்
இந்த மசோதா சபாநாயகர் அப்பாவு மூலம் ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா நிறைவேறிய அந்த நாளில் துணை வேந்தர்களின் மாநாட்டை நடத்திக்கொண்டிருந்தார் கவர்னர். மசோதா குறித்து கவர்னரிடம் அவரது செயலாளர் சொல்லியிருக்கிறார். அதை கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாராம் கவர்னர் என்கிறார்கள்.. ஆளுநர் தரப்பு வட்டாரங்கள்.

என்ன அர்த்தம்
அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கும் போது, நீட் தேர்வு உள்பட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கவர்னரின் மேஜையில் இன்னும் காத்திருக்கிறது. அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு மசோதாவிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. அந்த வரிசையில் இந்த சட்டத்திருத்த மசோதாவும் சேர்ந்து விடும்.

மசோதா மேல் மசோதா
அதாவது, தனது அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை அவரே எப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்? ஆளுநர் இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்று எந்த வகையில் இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது? என்கிற யோசனையில் வெளிப்பட்டது அந்த நமட்டுச் சிரிப்பு'' என்கிறார்கள் அதிகாரிகள். ஆளுநர் இந்த நாளுக்குள் மசோதாவை டெல்லிக்கு அனுப்பி வேண்டும் என்று விதி எதுவும் கிடையாது. அவருக்கு இதில் நெருக்கடி எதுவும் கொடுக்க முடியாது.

நீட் மசோதா
இதனால் ஆளுனர் ரவி இப்போதைக்கு இந்த மசோதா மீது முடிவு எடுக்க வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆளுனர் ஏற்கனவே நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போவதாக கடந்த வாரம் சில செய்திகள் வந்தன. ஆனால் ஆளுநர் அந்த முடிவை இதுவரை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications